நல்வழி



நீரும் நிழலும் நிலம் பொதியும் நெற்கட்டும் பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வரும்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும் தரும்சிவந்த தாமரையாள் தான்.(பா-21) செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் வஞ்சகம் இல்லாதவர்களுக்கு எக்காலத்தும் நீர் வளமும், உறைவிடமும், நிலம் நிறைய நெற்கட்டுகளும், பெருமையும், புகழும், சிறந்த வாழ்க்கையும், ஊர்களும், வளரும் செல்வமும், நீண்ட ஆயுளையும் தருவாள்.

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்