வன்னியில் நடைபெறும் மனிதாபிமான நெருக்கடிகளை எடுத்து விளக்கும் ஈழத்துப் பாப்பா பாடல்

ஓடி மறைந்துகொள் பாப்பா -நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா

பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா -நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா

சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா

எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா

சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா

வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா

பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை

புகைமண்டலமாய் ஆனதெம் தேசம் - பார்த்து நகைக்கிறான் எதிரி பாப்பா

தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா

பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று பேய்களின் ஆட்சியடி பாப்பா

யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின் சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா

இரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம் மொத்தத்தில் பாவிகளடி பாப்பா

காக்கை குருவி எங்கள் ஜாதி - இவற்றோடு காட்டில் வாழ்கிறோம் பாப்பா

தேளும் பாம்பும் புடைசூழ - நாம் நாளும் வாழ்கிறோம் பாப்பா

தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம் தலைவிதி இதுதான் பாப்பா

அகதிகளா

www.tamilkathir.com


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue