வண்ணப் படம் – சந்தர் சுப்பிரமணியன்




வண்ணப் படம்


வண்ணம் தெளித்து வரைகின்றேன்! – நான்
வரிசைப் பூக்கள் வரைகின்றேன்!
கண்கள் கூட வரைகின்றேன்! – அதில்
கருப்பாய் மணிநான் வரைகின்றேன்!

காட்டுப் புலிநான் வரைகின்றேன்! – அதன்
கரத்தில் நகங்கள் வரைகின்றேன்!
ஆட்டைப் பார்த்து வரைகின்றேன்! – உடன்
அருகம் புல்லும் வரைகின்றேன்!

கோட்டுப் படங்கள் வரைகின்றேன்! – ஒரு
கோவில் கூட வரைகின்றேன்!
வீட்டுச் சுவரில் மாட்டிவிட – நான்
விரைவாய் வரைந்து தருகின்றேன்!
– சந்தர் சுப்பிரமணியன்
புன்னகைப் பூக்கள்  பக்கம் 29

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்