Skip to main content

குதூகலித்தே ஆடுவாய் ! – கே. கமலசரசுவதி




குதூகலித்தே ஆடுவாய் !

குதித்தாடிக் குதித்தாடிக்,
குதூகலித்தே ஆடுவாய் !
குமிழ்ச் சிரிப்புக் காட்டியே,
குறுநகையும் புரிவாய் !
குதித்தாடும் காலமிது,
குறை எதுவும் வைக்காதே !
சிறை பூட்டும் காலமதில்,
கால் விலங்கும் பூட்டிடுவார்.
எதற்கென்றும் அஞ்சாதே !
எவரிடமும் கெஞ்சாதே !
குமிழ்ச் சிரிப்பை சதங்கையாக்கி,
குதூகலமாய் நடனமிடு !
– கே. கமலசரசுவதி

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்