திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி : வெ. அரங்கராசன்
திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி
திருக்குறள் அறுசொல் உரை
3.காமத்துப் பால்
15.கற்பு இயல்
120. தனிப்படர் மிகுதி
பிரிந்து தனித்து இருக்கும்
தலைவியிடம் படரும் மிகுதுயர்
(01-10 தலைவி சொல்லியவை)
- தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர், பெற்றாரே
காதலிப்பார் காதலிக்கப்பட்டால், அக்காதல்,
விதைகள் இல்லாச் சுவைப்பழம்.
- வாழ்வார்க்கு வானம் பயந்(து)அற்(று)ஆல், வீழ்வார்க்கு
காதலியர்க்குக் காதலர் காட்டும்
பேர்அன்பு, வாழ்வார்க்கு வான்மழைபோல்.
- வீழுநர் வீழப் படுவார்க்(கு) அமையுமே,
காதலரால் காதலிக்கப்படுநர்க்கே
“வாழ்கிறோம்” என்னும் பெருமிதம் ஆம்.
- வீழப் படுவார் கெழீஇஇலர், தாம்வீழ்வார்,
இல்லறத்தார், ஒருவரை ஒருவர்
விரும்பாவிடின், உறவு இல்லாரே.
- நாம்காதல் கொண்டார், நமக்(கு)எவன் செய்பவோ?
காதல் கொள்ளாத காதலர்,
என்ன இன்பத்தைச் செய்திடுவார்?
- ஒருதலையான் இன்னாது, காமம்;காப் போல,
காவடித் தண்டின் சமச்சுமைபோல்,
இருபக்கக் காதல்தான் பேர்இன்பம்.
- பருவரலும், பைதலும், காணான்கொல்? காமன்
ஒருவரிடமே இயங்கும் மன்மதன்,
காதல் நோயை அறியானோ?
- வீழ்வாரின் இன்சொல் பெறாஅ(து), உலகத்து,
காதலர்தம் இன்சொல்லைப் பெறாதார்,
ஞாலத்தில் பெரும்கொடியார் ஆவார்.
- நசைஇயார், நல்கார் எனினும், அவர்மாட்(டு)
காதலர் அன்புஇலார் ஆயினும்,
அவர்புகழ் கேட்டல், இனிமைதான்.
- உறாஅர்க்(கு) உறுநோய் உரைப்பாய்; கடலைச்
நெஞ்சே! பிரிந்தார்க்கு என்துயரைச்
சொல்லு; கடலைச் சினவாதே.
பேரா.வெ.அரங்கராசன்
Comments
Post a Comment