Skip to main content

பறவையே பெருந் தச்சன்! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்




பறவையே பெருந் தச்சன்! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்

தலைப்பு-பறவையே பெருந்தச்சன், மாம்பலம் ஆ.சந்திரசேகர்  : thalaippu_paravaiye_perunthacchan_mambalamchanthirasekar

தனக்குத் தானே கட்டிக்கொள்!

பறவையே பெருந் தச்சன்!
பாரினில் முதல் சிற்பி!
திறமையாக கட்டும் கலைஞர் !
தெரியுதே தேர்ந்த தன்கூட்டில்!
சிறகுதான் பறக்கும் விமானம்!
சிற்றலகுதான் சுமக்கும் வாகனம்!
உறவுக்கு சொந்த இல்லம்!
உலகுக்கே வீட்டுப் பாடம்!
கட்டுமான வீட்டின் அடித்தளம்
எட்டடி தோண்டினாலும் விழுதே!
கற்றுக்கொள் பறவை பாடம் !
கல்வியதுவே தொழில் நுட்பம்!
விட்டுவிட்டு வீசும் தென்றல்
ஆட்டிவிட்டு அச்சுறுத்தும் மரம் !
ஒட்டிகிளையில் விழாத கூடு!.
முட்டைவிழா அற்புத வீடு !
தொங்கும் தோட்டக் குடிலில்
தங்கிவசிக்க ஆசைக் கிளியே !
இங்கே அந்தரத்தில் இல்லம்
இனிதே கட்ட என்னவிலையே!
உன்னை மனிதன் கேட்கிறான்!
“தனக்குத் தானே கட்டிக்கொள்!
என்னைப் பார்த்து கற்றுக்கொள் ”
விண்ணில் பறந்து சொன்னதுபறவை!
மாம்பலம் ஆ.சந்திரசேகர்
மாம்பலம்  ஆ.சந்திரசேகர் : mambalam_chanthirasekar

Comments

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue