Skip to main content

வாழி நெஞ்சே! – வளையாபதி

தலைப்பு-வாழிநெஞ்சே :thalaippu_valaiyapathi

நீல நிறத்தனவாய் நெய் கனிந்து போதவிழ்ந்து
கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே
கோலங் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும்
காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே
காலக்கனலெரியின் வேவன கண்டாலும்
சால மயங்குவ தென்வாழி நெஞ்சே
வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்
மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே
மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே
உத்தம நன்னெறிக் கண் நில்வாழி நெஞ்சே
உத்தம நன்னெறிக் கண் நின்னூக்கஞ் செய்தியேல்
சித்தி படர்தல் தெளி வாழி நெஞ்சே !
வளையாபதி



Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்