Thamizhk katamaikal 100 : தமிழ்க்கடமைகள் 100. பைந்தமிழ்ப் பெருந்தேவி திருப்பள்ளியெழுச்சி

தமிழ்க்கடமைகள் 100. பைந்தமிழ்ப் பெருந்தேவி திருப்பள்ளியெழுச்சி

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 03/10/2011


இன்றெமை ஆட்கொளும் எந்தமிழ்ச் செல்வி
எந்தமிழ்க் கன்னியே எம்முயிர்த் தேவி
மன்னிடும் உயிருடல் மாண்பொருள் எல்லாம்
மகிழ்வுடன் நின்பதம் வைத்துமே நிற்பம்
நின்னரு வரவினை நினைத்துமே இந்நாள்
நிற்கிறார் நந்தமிழ் அரசியல் மக்கள்
உன்னரு நெடும்புகழ் உற்றிடு மாதே,
உவப்புடன் பள்ளியெ ழுந்தரு ளாயே.
- பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார்:
பரந்தாமனார் கவிதைகள்: பக்கம். 48

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue