Ilakkuvanarin pataippu manikal 80 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 80. பரப்பளவில் தமிழ் சுருங்கிவிட்டது.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 80. பரப்பளவில் தமிழ் சுருங்கிவிட்டது.

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 27/10/2011




கடலாலும் ஆரிய மொழியாலும், வழங்கிவரும் பரப்பளவில் தமிழ் சுருங்கிவிட்டது.  பரந்த நிலப்பரப்பில் வழங்கிவரும் மொழி காலப்போக்கில் கிளை மொழிகளாகப் பிரிந்து, கிளை மொழிகளாக உருவெடுத்து வேற்று மொழிகளாக வளர்ந்து விடுவது மொழி வரலாறு அறிவிக்கும் உண்மையேயாயினும், ஆரியம் இந் நிலை மாற்றங்களை விரைவுபடுத்தி விட்டது  என்பதனை மறுத்தல் இயலாது.  ஆரியம் தமிழ் வழங்கும் பரப்பளவினைச் சுருங்கச் செய்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை.  பயன்படுவகையிலும் சுருங்கச் செய்து விட்டது. ஆரியமே இந்நாட்டின் பண்பாட்டு உயர்மொழி யென்றும் கடவுள் மொழி என்றும் விளம்பரப்படுத்தப்பட்டு கல்வி, சமயம், கடவுள் வழிபாடு. சடங்கு முதலிய மக்கட்குப் பயன்படு துறைகளில் எல்லாம் ஆரியமே ஆட்சி பெற்றுவிட்டது; தமிழகத்தில் பல்லவர் காலத்தில் அரசியலிலும் முதன்மைபெற்று ஆட்சி மொழியாகி விட்டது.  தமிழ் வீட்டளவில் சுருங்கிய முறையில் பயன்படுத்தப் பட்டாலும் அத் தமிழ் ஆரியமொழிச் சொற்களை மிகுதியாகக் கொண்டு விளங்கியது.  அத் தமிழில் பேசுதலும் தம் உயர்நிலை சுட்டாது எனக் கருதினர். கலப்புத் தமிழைக் கண்டவர்கள் அதனை ஆரியத்தின் சிதைவு மொழி எனக் கருதினர்.  தமிழ்ப் புலவர்களும் அவ்வாறே கருதினர் எனின் தமிழ் மொழி நிலையை என்னென்பது?
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 280)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue