அறிவியல் வாசலில் தமிழ் – கு. செ. சிவபாலன்


அறிவியல் வாசலில் தமிழ் – கு. செ. சிவபாலன்

55door_to_science

     

முக நூலில்
முகமறியா ஒருவன் கேட்டான்
என்ன உண்டு தமிழில் – சொன்னேன்
தமிழ் . . .
அணுவைத் துளைத்தலை
அன்றே சொன்ன அவ்வை மொழி.
உலகம் இயங்க உரக்க முழங்கிய
வள்ளுவன்  வாய் மொழி.
உடற் பிணி குறைய , மனக்குறை  மறைய
சமூகம்  பற்றி , சரித்திரம் பற்றி
சொல்லாத பொருள் உண்டோ தமிழில் ?
வளம் உண்டு.
நயம் உண்டு -  என்றாலும்
அறிவியல் தேடலில் , தேவையில்
தேயுமோ தமிழ் மொழி ?  – ஒரு குரல்.
ஆங்கிலமும் அஞ்சிட – இணையத்தில்
அச்சாரம் இட்டது தமிழ் மொழி.
பயன்பாடு குறைந்தாலும்
பல மொழி கலந்தாலும்
பயம் வேண்டா தம்பி !
தமிழில் படி – முதலில் தமிழைப் படி !!
கலைச் சொற்களை உருவாக்கு.
தமிழினை வளமாக்கு.
நாளும் ஒரு புத்தகம் படி – மொழி
புத்தாக்கத்திற்கு அதுவே முதற்படி.
உணர்வுகள் உரமானால்
கனவுகள் கை கூடும்.
விழுதுகள் வேர் பிடித்தால்  . .
தமிழ் வழி கற்றால் . .
தமிழ் உணர்வு பெற்றால். .
அறிவியல் வாசலில்
அரியாசனம் இட்டு
அமரும் எம் தமிழ் மொழி – இது உறுதி !
 
— கு. செ. சிவபாலன்
ஆராய்ச்சி வளமையர் -வேளாண்மை
 வேளாண் கல்லுரி, திருச்சிராப்பள்ளி.
agri_sivapalan01



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue