Skip to main content

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 4 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

ஆ.வெ.முல்லைநிலவழகன்
ஆ.வெ.முல்லைநிலவழகன்

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! :

காட்சி -4

அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு
இடம்      :     குருவிக் கூடு
நிலைமை  :     (நாடகம் காண வந்தோரைப்
பேடது கண்டு திகைக்கின்றது)
பெண்   :           இன்றென்ன! வருவோர்! போவோருமாக
                   நன்றே! தெருவினில் மக்கள் கூட்டம்?
ஆண்     :        பொங்கல் திருநாள் நாடகமன்றோ?
எங்கும் அதுதான்; இத்தனைக் கூட்டம்!
                “தமிழ்த்தாய்’ என்பது நாடகப் பெயராம்?
                        அமிழ்தாய் இங்கு உரைத்தார்! சிலர்தான்
பெண் :   தாவியே வாசலில் இருக்கின்ற
பூ அரசமரத்திற்கே
சென்றே கிளையில் நாம் அமர்ந்து!
நன்றே பார்ப்போம் நாடகத்தை!
ஆண்      :    பொறுமையாய்க் கொஞ்சம் இருந்தாலென்ன?
சிறிதுநேரம் தாழ்த்தியே செல்வோம்!
பெண்     :     கவிஞரும் அவரும் போய் விட்டாரே
கவனித்தாயா? இல்லையா? சொல் நீ
ஆண்     :     சேச்சே ஒன்று பிடித்தால்! உடனே நீ
மூச்சுபோல தொடர்ந்து பிடிப்பாய்!
பெண்     :ஊதலும் வேகமாய் ஊதுது! பார்! நீயே
கசமுசவென்ற பேச்சையும் கேள்! நீயே
விளக்கும் அணைந்ததே! தெரியலையா?
விளக்கமாய் இன்னும் சொல்லணுமா?

(காட்சி முடிவு)
two-sparrows04

(பாடும்)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue