Skip to main content

கறுப்புப் பூனை -சந்தர் சுப்பிரமணியன்




கறுப்புப் பூனை


கறுப்புப் பூனை கண்கள் மூடி
என்ன பண்ணுது? – அங்கு
என்ன பண்ணுது? – அது
கடந்து போகும் எலியைத் தின்னக்
காத்திருக்குது! – அங்குக்
காத்திருக்குது!

சுறுசுறுப்பாய் ஓடும் எலி
என்ன பண்ணுது? – அங்கு
என்ன பண்ணுது? – அது
தூங்கு கின்ற பூனைக் காலைப்
பார்த்திருக்குது! – காலைப்
பார்த்திருக்குது!

சந்தர் சுப்பிரமணியன்
புன்னகைப் பூக்கள்  பக்கம் 31

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்