Skip to main content

தமிழ்த்தாய் வணக்கம் 11- 15 : நாரா. நாச்சியப்பன்

(தமிழ்த்தாய் வணக்கம் 6-10 தொடர்ச்சி)

தமிழ்த்தாய் வணக்கம் 11-  15


நல்ல தமிழிங்கு நாடாள வேண்டுமென்றால்
புல்லர் தலையெடுத்துப் பொங்குகின்றார்-வல்ல
தமிழ்த்தாயே உன்மக்கள் தாமாய்க் குழியில்
அமிழுந் துயரை அகற்று.   (11)

பொய்யும் புரட்டும் புதுவாழ்வு சேர்க்குமென
நையும் தமிழர் நலங்காண-மெய்யறிவைத்
தந்துகாப் பாற்றத் தமிழே அருள்பொழியச்
சிந்தை செலுத்து சிறிது.  (12)

அன்பு மொழியாலே நெஞ்சை அணைக்கின்ற
இன்பத் தமிழே எழில்வடிவே-உன்புகழைப்
பாடுகின்ற போதெல்லாம் பாய்கின்ற இன்பத்தால்
ஆடுகின்ற தென்றன் அகம். (13)

தென்னகத்தைச் சேர்ந்திருக்கும் செந்தமிழர் வாழ்க்கையிலே
முன்னேறும் போதெல்லாம் மூளுகின்ற-இன்பத்தை
இங்குன்னை விட்டிங்கே யார்க்குரைப்பேன்; ஆற்றுக்குப்
பொங்கு கடலே புகல்.(14)

வள்ளுவனைப் பெற்று வளர்த்த மடிதனிலே
துள்ளிவிள யாடும் துடிப்புடைய-பிள்ளைநான்
தோன்றியதை எண்ணுங்கால் தோன்றும் பெருமையிலே
ஊன்றி நிலைத்த துவப்பு. (15)
(தொடரும்)
-பாவலர் நாரா. நாச்சியப்பன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue