வெல்க பிறர் நெஞ்சு! – சேலம்பாலன்

இன்தமிழின் நற்கவிஞர்
இலக்குவன் திருவள்ளுவன்(ர்)
 அன்புடைத் தமிழ்ப்பணிக்கே
அடியேனின் வாழ்த்துகள்!
தங்கள் பணியெல்லாம்
தாய்த்தமிழ் நற்பணியாய்
எங்கெங்கும் உள்ளோர்
இதயத்தால்-பொங்கிமகிழ்
வெய்திடவே எந்நாளும்
ஏற்றமுறப் பொங்கட்டும்!
நெய்திடுக! வெல்கபிறர் நெஞ்சு!
என்றும்தமிழ் அன்புடன்
கவிமாமணி சேலம்பாலன், ஈரோடு
salem balan02

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue