Skip to main content

தமிழுரிமை பறித்தாரை மாய்ப்போம்!

கரிகாலன் மகனே! தமிழுரிமை பறித்தாரை மாய்ப்போம்!

- திருக்குறள்பாவலன் தமிழ்மகிழ்நன்
விழித்தவிழி இமையாமல் வீணர்கண் கண்டான்!
வெங்களத்தில் மார்மீது விழுப்புண்கள் பெற்றான்!
balachandran2
அழியாத புகழுடம்பு ஐயனவன் பெற்றான்!
ஐயமின்றித் தமிழீழம் ஆளவுயிர் தந்தான்!
பழிசுமந்த சிங்களரைப் பசும்மழலைக் கண்கள்
பார்த்தபடி படமாகப் பாரெங்கும் கண்டார்!
எழிலூறும் இருவிழியால் எரிதழலை யெழுப்பும்
ஏந்தலவன் நினைவேந்தி இனியென்று மிருப்போம்!
வெறித்தபிள்ளை விழிகளிலே வாழ்வச்சம் இல்லை
வாழ்நாளில் இதுபோலே வையகமெங்கும் உண்டா?
எறிந்தவேலை இமையாமல் எதிர்த்துவிழி நோக்கும்
இணையில்லாக் கரிகாலன் இளையமக னிவனே!
பறித்தவாழ்வை யார்தருவார்? பாவிகளே! பிள்ளை
பெற்றவளின் வயிறெரியப் பச்சை மண்ணைச் சுட்டீர்!
முறித்தீர்கள் மூர்க்கர்காள்! முருங்கையிளஞ் செடியை!
முனைமுகத்தில் கரிகாலன் முறைசெய்து ஒறுப்பான்!
ஓடிநின்று ஒளியவில்லை; உளறவில்லை வெறியால்
உன்மத்தம் பிடித்தவரை ஒளிர்விழியால் எரித்தான்!
வாடிநின்று வாழ்வதனை வேண்டவில்லை யிளையோன்!
விடுதலைக்கு வாளேந்தி வெற்றிதேடும் மரபோன்!
பாடியாடிப் பனிமலராய்ப் பழகுமவன் உயிரைப்
பன்றிகளாம் சிங்களரே பாய்ந்துவந்து எடுத்தார்!
கூடிநின்று கொக்கரித்துக் குலக்கொழுந்தைக் கொன்றார்!
கொடுங்கோற் சிங்களர்கள் கூண்டோடு ஒழிக!
pulipadai1
விடுதலையே வேண்டிநின்றோம்! வேறென்ன கேட்டோம்?
விலையாகச் சிங்களரெம் வாழ்வுரிமை தீய்த்தே
படுகொலைகள் செய்ததனை படமெடுத்தும் வைத்தார்!
படஞ்சொல்லுங் கொடுமையினை பார்க்கவிழி மறுக்கும்!
கெடுதலையே செய்தார்கள் கேட்ட நெஞ்சும் வெடிக்கும்!
கீழோர்கள் சிங்களரே கெடுகவென்று ஒலிக்கும்!
நடுநின்று நயன்மையினை நல்கவில்லை ஞாலம்!
நைந்திருக்கும் தமிழீழம் நாடுவது ஞாயம்!
எரித்தவரை யெரித்துமீள யெழுந்தினிது வாழ
என்றுமெங்கள் கரிகாலன் ஈழநிலம் ஆள
கரிகாலன் காலமிதில் கன்னலீழங் காண
காடுநீங்கி களம்வென்று கவலையின்றி வாழ
நரிக்கூட்ட வஞ்சகத்தால் நலிந்தயினம் நிமிர
ஞாலத்தில் தமிழீழ நாடென்றும் ஒளிர
மரித்தபுலி மாவீரர் உயிர்த்தெழுந்து வருக!
மண்மீட்க மண்பிளந்து மாவீரர் யெழுக!
இழக்கயினி எதுவுமில்லை! எழுந்தெதிர்த்து வெல்வோம்!
எல்லாளன் புலிப்படையில் எல்லோருஞ் சேர்வோம்!pulipadai2
பழக்கமில்லை மண்டியிட்டு! பாரதிர எழுவோம்!
படைதிரட்டி யாளியென பகைவரினை அடுவோம்!
முழக்கமிட்டு முரசுகொட்டி முனைமுகத்தில் வெல்வோம்!
முடிசூடுந் தமிழன்னை முகமலர வாழ்வோம்!
பழந்தமிழைப் பழிக்கின்ற பகையதனைத் தீய்ப்போம்!
படைத்திமிரால் தமிழுரிமை பறித்தாரை மாய்ப்போம்!
LTTE force1

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue