Skip to main content

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.11-16

 அகரமுதல




(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10 தொடர்ச்சி)

இராவண காவியம்

1. தமிழகக் காண்டம்

3. மக்கட் படலம்

11. உழுந்தொ ழிற்குரித் தாகவே

ஒழிந்த யாவு முஞற்றலான்

பழந்த மிழ்வகுப் பாரெலாம்

உழுந்தொ ழிற்கொ ளுழவரே.

12. தாளி னாற்பொருள் தருவதை

வேளெ னப்பொருள் விள்ளுவர்

நாளு மேதொழில் நன்குசெய்

தாளு வோர்கள்வே ளாளரே.

13. இத்தொ ழிலிவர்க் கின்றெனா

எத்தொ ழிலுமெ வாருஞ்செய்

தத்தொ ழிற்குரி யார்களாய்

ஒத்து வாழ்ந்த ரொருங்கரோ.

14. மன்ன ராகலாம் பின்னரும்

மன்னர் பின்னரின் வாழலாம்

அன்னர் யாவரு மந்தணர்

பின்னென் வேற்றுமை பேசலே’,

 15. அரச ரில்வழி யந்தணர்

அரச ராயுல காளுவர் வரிசை

பெற்றுயர் மற்றரும் அரசு

தாங்குவ ரங்ஙனே.

+++

12. தாள்-முயற்சி.

+++

(தொடரும்)

இராவண காவியம்

புலவர் குழந்தை

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue