Skip to main content

தொந்திக் கரைசல் கண்டேன்! நொந்தேன்! – அரங்க கனகராசன் கனகு

     27 September 2015      No Comment


kadalil=pillaiyar
தொலைக் காட்சியில் கண்டேன் … நொந்தேன்…
கரைத்தாயிற்று கடலில்…
வேதிக் கலவைகளும் கலக்கின கடல்தனை!
தொந்தி உருண்டையை – ஏதோ
வெல்லக்கட்டியென நினைத்து
சுள்ளெனக் கடித்துத் தின்னவே
வந்தனவே மீன்கள்!
வேதிக் கலவையது – மீனின்
பேதியானது!
நோயின் வலையில் சிக்கி -பின்னர்
மீனவன் விரித்த வலையில் மாண்டனவே!
நோயுற்ற மீனை விலைக் கொடுத்துண்ட
மாந்தரும் சிக்கினரே நோய்தனில்!
அலைநீரில்
வாழும் மீனவர் வாழ்வதும்
பாழாகாதோ!
பாழும் வேதிக் கலவை – விநாயகன் உருவில்
ஆழ் கடல்தனில் கலந்திட்டால்?
சிந்திப்பாருண்டோ – சந்தி சிரிக்காதோ
தொந்திக் கரைசல் கண்டு!
மீனவனே – நீ
காணா தேனிருக்கிறாய் –
பாழாவது உன் வாழ்வடா!
வேதி உருண்டைதனை கரைப்பதெனில்
அவரவர் இல்லத்தில் கரைக்கட்டுமே!
ஆழ்கடல் தேடி வந்து
ஆங்கு வாழ் உயிர் கொல்வதோ – இது நெறியோ?
விளம்புவீர்!

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue