Skip to main content

தமிழ்த் தெய்வ வணக்கம் – கவிஞர் முடியரசன்


தமிழ்த் தெய்வ வணக்கம் – கவிஞர் முடியரசன்

mudiarasan01
தாயே உயிரே தமிழே நினைவணங்கும்
சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே
தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங்
கிலையென்றால் இன்பமெனக் கேது.
பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும்
ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் – நாவாழும்
மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே
சாவா வரமெனக்குத் தா.
தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே
என்பால் அரும்பி எழுமுணர்வை – அன்பால்
தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய்
அடிக்கே எனையாண் டருள்.
- பூங்கொடி



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue