Skip to main content

தமிழ்த் தெய்வ வணக்கம் – கவிஞர் முடியரசன்


தமிழ்த் தெய்வ வணக்கம் – கவிஞர் முடியரசன்

mudiarasan01
தாயே உயிரே தமிழே நினைவணங்கும்
சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே
தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங்
கிலையென்றால் இன்பமெனக் கேது.
பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும்
ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் – நாவாழும்
மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே
சாவா வரமெனக்குத் தா.
தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே
என்பால் அரும்பி எழுமுணர்வை – அன்பால்
தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய்
அடிக்கே எனையாண் டருள்.
- பூங்கொடி



Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்