துறைமங்கலம் சிவப்பிரகாசர் அருளியது கைம்மாறு உகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தித்தம்மால் இயலுதவி தாம்செய்வர் - அம்மாமுளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்குவிளைக்கும் வலியனதாம் மென்று. (பாடல்-27)முளைக்கும் பற்கள் தம்முடன் இருக்கும் நாவிற்கு கடினமான தின்பண்டங்களாயினும், மென்று கொடுத்து மிக்க சுவையைத் தரும். அதுபோல, கற்றறிந்த சான்றோர் பிரதிபலனை எதிர்பாராமல் உடலை வருந்தச் செய்து, தம்மால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்வார்கள்.
Popular posts from this blog
திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 02 மார்ச்சு 2020 கருத்திற்காக.. (திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5/6 தொடர்ச்சி) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6 8.8.10.மக்கள்பண்[பு] இல்லா தவர் [குறள்.997] அறிபொருள்: மனித நேயம் சார்ந்த வாழ்க்கை 8.8.11.எற்றென்று இரங்குவ செய்யற்க [குறள்.655] அறிபொருள்: இரங்கத் தக்க செயல்களைச் செய்யாமை 8.8.12.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவ[து]ஆம் நட்பு [குறள்.788] அறிபொருள்: நண்பர்களின் துன்பத்தை உடனே நீக்குதல் 8.8.13.சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூது [குறள்.934] அறிபொருள்: சிறுமைகள் பல செய்து சீர் அழிக்கும் சூதினை ஆடாமை 8.8.14.பிறர்க்[கு]இன்னா செய்யாமை [குறள்.311] அறிபொருள்: பிறர்க்குத் துன்பம் செய்யாமை 8.8.15.அறவினை யா[து]எனின் கொல்லாமை [குறள்.321] அறிபொருள்: எந்த உயிரையும் கொல்லாமை 8.8.16.பிறப்[பு]ஒக்கும் எல்லா உயிர்க்கும் [குறள்.972] அறிபொருள்: பிறப்பியல் சமன்மையை மதித்துச் செயல்படுதல் 8....
Comments
Post a Comment