நன்னெறி


துறைமங்கலம் சிவப்பிரகாசர் அருளியது கைம்மாறு உகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தித்தம்மால் இயலுதவி தாம்செய்வர் - அம்மாமுளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்குவிளைக்கும் வலியனதாம் மென்று. (பாடல்-27)முளைக்கும் பற்கள் தம்முடன் இருக்கும் நாவிற்கு கடினமான தின்பண்டங்களாயினும், மென்று கொடுத்து மிக்க சுவையைத் தரும். அதுபோல, கற்றறிந்த சான்றோர் பிரதிபலனை எதிர்பாராமல் உடலை வருந்தச் செய்து, தம்மால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்வார்கள்.
நன்னெறி


துறைமங்கலம் சிவப்பிரகாசர் அருளியது உடலின் சிறுமை கண்டு ஒண்புலவர் கல்விக்கடலின் பெருமை கடவார் - மடவரால்கண்அளவாய் நின்றதோ காணும் கதிர்ஒளிதான்விண் அளவாயிற்றோ விளம்பு. (பாடல்-26)இளமையான பெண்ணே! கதிரவனின் ஒளியானது காணும் கண்ணின் அளவோடு நின்றுவிட்டதா? இல்லை, அதன் ஒளி எங்கும் பரவியிருக்கிறது. அதனை வெல்லும் ஒளிவேறில்லை. அதுபோல, கற்றறிந்த புலவர் உருவத்தில் சிறியவராக இருந்தாலும், அவரது கல்வியாகிய கடலின் பெருமையை யாரும் எளிதாக எண்ணமாட்டார்கள்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue