Skip to main content

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1201-1210) – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1191-1200) தொடர்ச்சி)

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!

(திருவள்ளுவர், திருக்குறள்,) 

காமத்துப்பால்

121. நினைந்தவர் புலம்பல்

121. கள்ளைவிட இனிது காதல். (1201)

122. பிரிந்தாலும் நினைத்தால் இனியது காதலே! (1202)

123. வருவதுபோன்ற தும்மல் வரவில்லையே! அவரும் நினைப்பவர்போல் நினைக்கவில்லையோ? (1203)

124. என் நெஞ்சில் காதலர்! அவர் நெஞ்சில் நானோ?(1204)

125. அவர் நெஞ்சுள் வரவிடாதார், எம் நெஞ்சுள் வர நாணவில்லையா?(1205)

126. அவருடனான நாளை நினைப்பதாலே வாழ்கிறேன். (1206)

127. மறக்காதபோதே பிரிவு சுடுகிறதே! மறந்தால் … ? (1207)

128.  எத்தனை முறைகள் நினைத்தாலும், சினவாமை அவர் சிறப்பன்றோ ! (1208)

129. “இருவரும் ஒருவரே” என்றவர் பிரிந்தமையால் உயிர் போகிறதே ! (1209)

130. பிரிந்தவரைத் தேடுவதால் நிலவே மறையாதே! (1210)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தாெடரும்)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue