இளமையில் வேல்கண்ணுடையவள் முதுமையில் பாதையில் நடந்து செல்லக் கைத்தடியைக் கண்ணாகக் கொண்டு கோல்கண்ணுடையவளாக இருக்கிறாள் என்று நயம்படக் கூறியுள்ளார்.
நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
என்னும் வாலியின் பாடல் ‘மரியான்’ படத்தில் வரும்.
இப்பாடல் காதல் பிரிவைக் கூறினாலும் இளமை இன்ப நிலையாமையையும் சுட்டிக் காட்டுகிறது. நிலையில்லா இன்பத்தில் கருத்து செலுத்தாமல் நிலையான அறச்செயற்பாட்டு இன்பத்தில் கருத்து செலுத்த வேண்டும்.
என்றாலும் நாளை முதுமை வருவது இயற்கை. அதற்காக இன்றைய இளமையை வீணாக்கக் கூடாது. இன்ப நாட்டத்தை அளவாகக் கொண்டு நல்வினைகளுக்கான வாய்ப்புகளைத் தேடி நல்லன ஆற்றி நிலையான இன்பம் பெற வேண்டும்.
காய் கனிவதும் அதைப் பயன்படுத்தாவிட்டால் மரத்திலேயே பழுத்து விழுவதும் இயற்கை. பயன்படுத்தாப் பழ மரத்தால் பயனில்லை. வெறுமனே வாழ்ந்து பயனில்லை. பழங்களை நாமும் சுவைத்தும் பிறருக்கும் வழங்கியும் இன்பம் காணலாமே! இளமையில் நல்வினைகளால் நாமும் பயனுற்றுப் பிறர் பயன்படவும் வாழலாமே!
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment