இளமையில் வேல்கண்ணுடையவள் முதுமையில் பாதையில் நடந்து செல்லக் கைத்தடியைக் கண்ணாகக் கொண்டு கோல்கண்ணுடையவளாக இருக்கிறாள் என்று நயம்படக் கூறியுள்ளார்.
நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
என்னும் வாலியின் பாடல் ‘மரியான்’ படத்தில் வரும்.
இப்பாடல் காதல் பிரிவைக் கூறினாலும் இளமை இன்ப நிலையாமையையும் சுட்டிக் காட்டுகிறது. நிலையில்லா இன்பத்தில் கருத்து செலுத்தாமல் நிலையான அறச்செயற்பாட்டு இன்பத்தில் கருத்து செலுத்த வேண்டும்.
என்றாலும் நாளை முதுமை வருவது இயற்கை. அதற்காக இன்றைய இளமையை வீணாக்கக் கூடாது. இன்ப நாட்டத்தை அளவாகக் கொண்டு நல்வினைகளுக்கான வாய்ப்புகளைத் தேடி நல்லன ஆற்றி நிலையான இன்பம் பெற வேண்டும்.
காய் கனிவதும் அதைப் பயன்படுத்தாவிட்டால் மரத்திலேயே பழுத்து விழுவதும் இயற்கை. பயன்படுத்தாப் பழ மரத்தால் பயனில்லை. வெறுமனே வாழ்ந்து பயனில்லை. பழங்களை நாமும் சுவைத்தும் பிறருக்கும் வழங்கியும் இன்பம் காணலாமே! இளமையில் நல்வினைகளால் நாமும் பயனுற்றுப் பிறர் பயன்படவும் வாழலாமே!
Comments
Post a Comment