பொருள்: பலிபீடத்தின் அருகில் உள்ள ஆடு தன்னை வெட்டிக் கொல்லப் போகிறார்கள் என உணராமல் எதிரில் உள்ள பூமாலையில் கட்டப்பட்டுள்ள இலைதழைகளை உண்கிறது. இதைப்போன்று நிலையற்ற இளமை இன்பத்தில் மகிழ்தல் நல்லறிவுடையாளர்களிடம் இல்லை.
அடையாளமாக வேலைக் கையில் பிடித்துக் கொண்டு ஆடும் மகன்என்பதால் வெறியாட்டம்ஆடுபவன் வேல் மகன் எனப்படுகிறான்.
ஆட்டிற்கு இருக்கும் அறியாமை போன்று நிலையற்ற கேளிக்கை இன்பங்களில் ஈடுபட்டு நிலையான நற்செயல்களில் கருத்து செலுத்தாமல் அறிவற்றவர்கள் உள்ளனர்.
‘பதிபக்தி’ படத்தில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்
இரைபோடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம், வீண்
அனுதாபம் கொண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே !
என்னும் பாடல் ஏமாறும் ஆடுபோல் இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறது. ஆனால், அவ்வாறு கெடுவழியிலான இன்பங்களை நிலை என எண்ணி நிலையான அறவினைப் பயனை உணராதவர் உள்ளனர்.ஆனால், அறிவுள்ளவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள் என்கிறது நாலடியார்.
நிலையற்ற தீவினை இன்பங்களில் ஏமாறாமல் நிலையான அறவினை இன்பம் கொள்க.
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment