பொருள்: யானையின் கழுத்து அழகுபட ஒளிவிட்டு விளங்கும்படி, வெண்கொற்றக் குடை நிழலில் பல படைகளுக்குத் தலைவராய் வெற்றி உலாச் சென்ற அரசர்களும் மற்றதீவினை கெடுக்க, அதன் காரணமாகக் தாம் திருமணம் செய்துகொண்ட மனைவியைப் பகைவர்கள் கவர்ந்து கொள்ளும்படி முன் பெருமித நிலைக்கு மாறான வறுமையாளராகி நிலைகுலைவர்.
அரசர் ஏறிஅமர்ந்ததால், யானை அழகும் பெருமையும் பெற்றது என்பதிலிருந்து ஏறியவர் சிறப்பு புரிகிறது. பல படைகளுக்குத் தலைமை தாங்கும் அரசர் என்பதால் அரசரின் வலிமையும் தெரிகிறது. மாற்றார் இவர் மனைவியைக் கவர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்படும் வகையில் ஆட்சியை யிழந்தார் என்பது புரிகிறது. செல்வம் நிலையாமை என்னும் அதிகாரத்தினுள் இப்பாடல் வருவதால் அனைவரும் செல்வம் நிலையற்றது என்ற அளவில் பொருள் தருகின்றனர். செல்வம் என்பது பணமும் அணிகலன்களும் பிற உடைமைகளும் மட்டுமல்ல. ஆட்சியையும் செல்வம் என்றே சொல்லலாம். எனினும் வெற்றியும் வலிமையும் நிலையானதல்ல என்றே கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து வாகைசூடிப் பின்னர் தோல்வியுற்ற மன்னர்கள் பலரின் வரலாறுகளை நாம் படித்திருக்கிறோம். இந்த நிலையாமையைச் சுட்டிக்காட்டித்தான் ஆட்சியும் செல்வமும் நிலையற்றது என உணர்த்துகிறது இப்பாடல்.
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment