பொருள்: ஏதேனும் ஒரு பொருள் கிடைத்தால் பின்னர் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என இறுகப் பிடித்துக்கொண்டு இராதே. அதை முன்னதாகவே அறவழியில் செலவிடு. அப்போதுதான் எமன் அழைத்துச் செல்லும் துன்ப வழியில் இருந்து தப்பி நல்லுலகு அடைவாய்.
சொல்விளக்கம்: என் ஆனும் = யாதாகிலும்; ஒன்று = ஒருபொருள்; தம் = தமது; கை = கையில்; உற = பொருந்த; பெற்றக்கால் = பெற்றால்; பின் ஆவது என்று = பின் கொடுப்போம் என்று; பிடித்து இரா = பிடித்திராமல்; முன்னே = முற்காலத்தில்; கொடுத்தார் = கொடுத்தவர்கள்; கோடு = தன்செய்கையிற் கோட்டம்; இல் = இல்லாத; தீ = பொல்லாத; கூற்றம் = இயமன்; தொடுத்து = பாசத்தாற்கட்டி; செல்லும் = போகும்; சுரம் = பாலைவனத்தினது; ஆறு = வழியை (நீக்கி); உயப் போவர் = பிழைத்துப் போவார்கள்.
எமன், அரசன் – ஆண்டி, தலைவர் – தொண்டர், ஏழை – பணக்காரன், ஆண் – பெண், குழந்தை – முதியோர் போன்ற எவ்வகைப் பாகுபாடுமின்றி விருப்புவெறுப்பின்றி நடந்துகொள்வதால் குற்றமற்ற நடுநிலையாளராகச் சிறப்பித்துக் ‘கோடுஇல்’ எனக் குறிக்கப் பெற்றுள்ளது. நடுநிலையாக இருந்தாலும் உயிரைப் பறிப்பதால் தீக் கூற்றம் என்கிறார் புலவர்.
கிடைத்த பொருளை உடனே பயன்படுத்தாவிட்டால் அச்செல்வம் அல்லது பொருள் அழிய நேரிடலாம், திருட்டுக்கு ஆளாகலாம், ஏதோ ஒரு வகையில் பயனற்றுப்போகலாம். பின்னர் யாருக்கோ, எதற்கோ உதவ எண்ணியிருந்தால் அதற்கான தேவையின்றி அவரோ அந்தச் சூழலோ இல்லாமல் போகலாம் அல்லது நம் மனம் மாறி உதவுவது மேலும் தள்ளிப்போகலாம். எனவேதான் வாய்ப்புள்ளபோதேநற்செயல்புரியவேண்டும்.
“அன்றறிவாம் என்னாது அறஞ் செய்க” (திருக்குறள் 36) எனத் திருவள்ளுவர் கூறுவதுபோல் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என எண்ணாமல் உடனே அறவினை ஆற்ற அறிவுறுத்துகிறது.
‘மகிழம்பூ’ திரைப்படத்தில் கவிஞர்மாயவநாதன், “இருப்பதை எல்லாம் கொடுக்கிற மனிதருக்கு நிலைக்கிற புகழ் இருக்கும்” என்கிறார்.
நிலைத்த புகழ் வேண்டுமெனில் இவ்வாறு பிறருக்கென நற்செயல்களைப் பொருள் இருக்கும்போதே செய்ய வேண்டும்.
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment