பொருள்: வயது எவ்வளவு கடந்துள்ளது? பற்களின் வலிமை எவ்வாறுள்ளது? வலிமையான உணவையும் உண்ண முடியுமா? என்று கருதப்படும் மறைந்துவரும் இளமையை அறிவுடையவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.
சொல் விளக்கம்: பருவம்=அகவை; எனைத்து=எத்தனை; உள=ஆகியுள்ளன; பல்லின்=பற்களினுடைய; பால்=வலிமைத்தன்மை; ஏனை=எவ்வளவு; இருசிகையும்= இரண்டு பிடியளவேனும் அல்லது வன்மை மென்மை ஆகிய இருவகை உணவுகளையும்; உண்டீரோ என்று=சாப்பிடடீர்களா எனக் கேட்டு, வரிசையால்=முறைமையாக, உள்=உள்ளத்திற்குள், நாட்டம்=ஆராய்ச்சி, கொள்ளப்படுதலால்=பிறரால் செய்யப்படுதலால், யாக்கை=உடலினது, கோள்=கொள்கையை, அறிவுடையார்=அறிவுள்ளவர்கள்l எண்ணார்= பொருளாக நினையார்.
‘போலீசுகாரன் மகள்’ படத்தில் கண்ணதாசனின்
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா
அழகுடன் இளமை தொடர்ந்து வராது
இருக்கின்ற போதே வா வா வா
என்னும் பாடல் வரிகள் வரும்.
இவ்வாறு இளமையில் இன்பம் துய்க்க எண்ணினாலும் அது நிலையற்றது எனவே, அறிவுடையவர்கள் இளமை வாழ்வு குறித்து மகிழார்.
நிலையாமையை வலியுறுத்துவதற்காக இவ்வாறு கூறினாலும் இளமை இன்பத்தையும் துய்க்க வேண்டும். வாழ்க்கை இன்பம் நிலைப்பதற்காக அற வழியில் பொருள் ஈட்டித் தானும் சுற்றத்தாரும் மகிழ வாழ வேண்டும்.
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment