பொருள்: வாழும் காலத்தை அளக்கும் கருவியாக விளங்கும் சூரியன், நாள் தவறாமல் தோன்றுவதால், ஆயுள் முடியும் முன்னர், பிறருக்கு உதவி செய்யுங்கள். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க மாட்டார்கள்.
சொற்பொருள்:
[வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅது எழுதலால் – வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்
நிலவார் நிலமிசை மேல்.]
வாழ்நாட்கு = வாழும் நாள்களுக்கு; அலகு ஆ(க) = அளவிடும் கருவியாக; வயங்கு =(விளங்கும்) ஒளிவிடும்; ஒளி = ஒளிக் கதிர்களை உடைய; மண்டிலம் = சூரியன்; வீழ்நாள் = வீழுங்காலம்; படாது = உண்டாகாமல்; எழுதலால் = (நாள்தோறும்) தோன்றுவதால்; வாழ்நாள் = வாழும்நாள்; உலவாமுன் = முடியும் முன்னர்; ஒப்புரவு = யாவர்க்கும் உதவும் நற்செயல்; ஆற்றுமின் = செய்யுங்கள்!; யாரும் = யாவரும்; நிலமிசைமேல் = நிலத்தின்மேல்; நிலவார் = நிலைக்க மாட்டார். (மிசைமேல் – ஒருபொருட்பன்மொழி)
காலத்தை நாள் மூலம் கணக்கிடுகிறோம். நாளை சூரியன் மூலம் அளவிடுகிறோம். சூரியனின் தோற்றமே நாளின் தோற்றம். நாள்தோறும் சூரியன் தோன்றுவது நிகழ்கிறது. இதனால் நம் வாழ்நாள் கூடுகிறது. ஆனால், ஆயுளில் ஒருநாள் கழிந்து இவ்வாறு கூடுவதால் வாழ்நாள் மிகுதியாகி நிலையாக உயிர் வாழ்ந்தவர் யாருமிலர். எனவே, வாழ்நாள் முடிவதற்கு முன்னரே நாம் பிறருக்கு உதவி வாழ வேண்டும்.
சூரியன் நமக்கு ஒளியை மட்டும் வழங்கவில்லை. காலத்தைக் கணக்கிட மட்டும் உதவவில்லை. வாழ்வின் நிலையாமையையும் உணர்த்துகிறது. நாள் என ஒன்றுபோல் காட்டி உயிரை அறுக்கும் வாளாகக் கதிரவன் விளங்குகிறான் (குறள் 334).
‘நாலுவேலி நிலம்’ திரைப்படத்தில் மருதகாசியின் பாடல் ஒன்றில்
தேவைக்கு மேல் பொருளைச் சேர்த்து வைத்துக் காப்பவரே!
ஆவிபோனபின் அதனால் என்ன பலன் சொல்வீரே!
என்னும் வரிகள் வரும். இருக்கும்போது இன்பம் துய்க்க வேண்டும் என்பதுபோல் பாடல் அமைந்தாலும் இருக்கும்போதே அறப்பயன் இன்பத்தைத் துய்க்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாம்.
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment