நேபாளத்தில் சீற்றமடா ! – சி. செயபாரதன், கனடா

 nepal_earthquake
இமயத் தொட்டிலில் ஆட்டமடா !
 இயற்கை அன்னை சீற்றமடா !
 பூமாதேவி சற்று தோள சைத்தாள் !
 பொத்தென வீழும் மாளிகைகள்
 பொடி ஆயின குடி வீடுகள் !
 செத்து மாண்டவர் எத்தனை பேர் ?
 இமைப் பொழுதில்
எல்லாம் இழந்தவர் எத்தனை பேர் ?
 கட்டிய இல்லம், சேமித்த செல்வம்
 பெட்டி, படுக்கை, உடுப்பு,
 உணவெல்லாம் மண்ணாய்ப் போச்சு !
 அந்தோ !
 வேனிற் கால வாடைக் காற்றில்,
அழும் சேய்க ளோடு
 தெரு மேடையில் தூங்குகிறார் !
 வானமே கூரை !
 சுவரில்லை ! கதவில்லை !
 போர்த்திக் கொள்ள
 துணி யில்லை !
 மானம் போனது, மதிப்பு போனது !
 தானம், தருமம் நாடி
 வானம் நோக்கித் துதிக்கிறார் !
 கடவுளுக்குக்
 கண்ணில்லை; காதில்லை !
 கருணையும் இல்லை !
 எண்ணிலா நேபாளியர் புதைபட்டார்
 உயிரொடு !
 இடிந்த வீடுகள் புதை காடாயின !
 எங்கெங்கு வாழினும்
 இன்னலடா!
 ஏழு பிறப்பிலும் தொல்லையடா !
 சூழ்வெளி மட்டும்
 பாழாக வில்லை யடா!
 ஆழ் பூமிக் குள்ளும்
 புற்று நோய் தொற்றுமடா
 – சி. செயபாரதன், கனடா


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue