ilakkuvanarin padaippumanikal 48: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 48. அரிட்டாடில் காலத்திற்கு முன்பே தமிழ் இலக்கியக் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 48. அரிட்டாடில் காலத்திற்கு முன்பே தமிழ் இலக்கியக் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 20, 2011


இலக்கியம் உலகியலைத் தழுவியும் உலகியலொடு ஒத்த கற்பனை முறையிலும் இயற்றப்படல் வேண்டும் எனவும் சுட்டுகின்றார்.
மேனாட்டார் இயற்கையைத் தழுவி இயற்றலே இலக்கியம் என்பர்.  தொல்காப்பியரும் இயற்கையையும் உலகியலையும் தழுவியே இலக்கியம் இயற்றப்படல் வேண்டுமென்று பன்முறையாலும் விளக்குகின்றார்.  இவ்வாறு இயற்றப்படுதலை ’ புலன் நெறி வழக்கம் என அழைத்துள்ளார். புலமை நிரம்பிய புலவரால் பாடப்பட்டு வழங்கி வருவது ஆதலின் அப்பெயர் பெற்றது போலும்.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலன்நெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரிய தாகும் என்மனார் புலவர்”

“என்மனார் புலவர்” என்பதனால் இப் புலன் நெறி வழக்கமாம் இலக்கியப் படைப்பு நெறி இவர்க்கு முன்புள்ள புலவர்களால் கொள்ளப்பட்ட ஒன்றாகும் எனத் தெரியலாம்.  ஆதலின், கிரேக்க நாட்டு அரித்தாட்டில் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே தமிழகத்தில் இலக்கிய நெறி முறைகள் வகுக்கப்படுப் பயிலப்பட்டுப் பாடப்பட்டு வந்தன என அறியலாம்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 149-150)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue