ilakkuvanarin padaippumanikal 46: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 46. தொழில் முறையில் கட்டுப்பாடு கிடையாது

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 46. தொழில் முறையில் கட்டுப்பாடு கிடையாது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 18, 2011


பொருளீட்டும் பொருட்டும் யாவரும் எங்கும் செல்லலாம்.  இன்ன இடத்திற்கு இன்னார் தாம் செல்ல வேண்டும் என்ற வரையறையோ கட்டுப்பாடோ கிடையாது. தொழில் முறையில் இன்ன சாதிக்கு இன்ன தொழில் தான் என்ற கட்டுப்பாடு கிடையாது.  இக் கருத்துக்களை வற்புறுத்துவதே
மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையால்
பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே”


மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே”
எனும் நூற்பாக்கள்.  இவைகட்குப் பொருள் கூறிய இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தமிழ் நூல் நெறி முறைக்கு மாறாக ஆரியர் நெறியினைத் தழுவிக் கொண்டுள்ளனர். ‘நால்வர்’ என்பதற்கு நான்குநில மக்களும் என்று பொருள் கொள்ளாது, நான்கு வருணத்தார் என்றும், மேலோர் என்பதற்கு ” மேன்மை யுற்றோர்” என்றும் பொருள் கொள்ளாது, இரு பிறப்பினராய மேல் வகுப்பு மூவர் என்றும், அவருள் சிறந்த பிராமணர் என்றும் பொருள் கொண்டு விட்டனர்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 145-146)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue