இலக்குவனாரின் படைப்பு மணிகள் 30. பன்னிரு மாதங்களும் தமிழ்ப்பெயர்களே

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

30. பன்னிரு மாதங்களும்        தமிழ்ப்பெயர்களே

 

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13339    பதிவு செய்த நாள் : August 11, 2011
..

கார் காலம் என்பது ஆவணியும் புரட்டாசியுமாம்.,  ஒரு காலத்தில் ஆண்டுத் தொடக்கம் ஆவணி முதலாகக் கொள்ளப்பட்டது என்பர்.  இன்றும் மலையாள நாட்டில் ஆண்டுத் தொடக்கம் ஆவணியிருந்தே கொள்ளப்படுகின்றது.  இப்பொழுது சித்திரை முதலாக ஆண்டுத் தொடக்கம் கொள்கின்றோம்.  இம்மாற்றம் என்று உண்டாயிற்று என்பது ஆராய்ந்து காண்டற்குரியது.  ஆவணியும் புரட்டாசியும் கார்காலம்; ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம்; மார்கழியும் தையும் முன் பனிக்காலம்; மாசியும் பங்குனியும் பின் பனிக் காலம்; சித்திரையும் வைகாசியும் இளவேனிற்காலம்; ஆனியும் ஆடியும் முதுவேனிற்காலம்.  இவ்வாறு காலங்கள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வந்தன.  பன்னிரண்டு மாதங்களும் தமிழ்ப் பெயர்களே.  இவை தொல்காப்பியர் காலத்திலேயே ஆட்சியிலிருந்தன.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 137)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue