Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 64 : கலை பயில் தெளிவு

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 63 : உடன் போக்கு – தொடர்ச்சி)

          நன்மக விதனை நயந்து வாங்கியோன்

தன்மனை யாளும் தாம்பெறு பேறெனக்

கண்ணென மணியெனக் காத்து வளர்த்தனர்;         

          எண்ணும் எழுத்தும் எழிலோ வியமும்    105

          பண்ணும் பிறவும் பழுதிலா துணர்ந்தே

செவ்விய நடையினன் செந்தமிழ் வல்லுநன்

அவ்வூர் மக்கள் அறிஞன்என் றியம்ப,    

           வாழ்வோன் ஒருநாள் வானுயர் கோவில்        

          சூழ்வோன் உட்புகச் சொற்றமிழ் கேட்டிலன்   110

          வழிபா டியற்றி வாழும் அவர்பால்

`இழிவாம் இச்செயல்! இனிமேல் தமிழால்

வழிபாட் டுரையை வழங்குக‘ என்னலும்,        

                    `நெறியன் றாம்’என நிகழ்த்தினர் மறையோர்;        

          மறியல் செய்தனன், மற்றவர் கூடிச்        115

          சிறியன் இவன்தான் செருக்குற் றானெனத்    

—————————————————————

          பேறு – செல்வம், உயிர்த்தவள் – பெற்றவள், ஊண் – உணவு, உழலும் – வருந்தும், ஆற்றான் – தாங்காதவன், செவ்விய நடை – நல்லொழுக்கம்.

+++++++++++++++++++++++++++++++

தூணிற் கட்டினர்; `தூய்தமிழ்ப் பெரியீர்!

வீணில் தவறுகள் விளைத்திட முனைந்தீர்!

உருவுகண்ட டெள்ளேல்! ஒருபொருள் யார்வாய்க்   

          கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதே அறிவாம்,    120

          கோட்பகை ஒன்றே மேற்பட நினைந்து

நாணுச் செயல்செயல் நற்றமிழ் மரபோ?’       

          (தொடரும்)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்