Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 63 : உடன் போக்கு

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 62 : பொன்னியின் செயலறு நிலை- தொடர்ச்சி)

          என்னலும், மின்னலின் இடையினள் துவண்டு

கன்னலின் மொழியாற் `கருத்துரை வெளிப்பட

உரை’எனத், தலைவன் `உடன்போக்’ கென்றனன்;   

          `விரைவாய்! விரைவாய்! விடுதலை பெறுவோம்;     80

          மீன்,புனல் வாழ வெறுப்பதும் உண்டோ?

ஏன்உனக் கையம்? எழுவாய் தலைவா!

நின்தாள் நிழலே என்பே ரின்பம்’

என்றவள் செப்ப, இருவரும் அவ்வயின் 

          ஒன்றிய உணர்வால் உடன்போக் கெழுந்தனர்;         85

          துன்றிருட் கணமெலாம் சென்றிடக் கதிரோன்

ஒளிமுகங் காட்டி உலகெலாம் விளக்கக்

களமர்தம் குலமகன் கண்விழித் தெழுவோன்

தன்மகட் காணான் தணியாச் சினமிகப்        

          `புன்மகள் தன்னிலும் என்குல மானம்    90

          ஒன்றே பெரிதாம்’ என்றே இருந்தனன்;  

          ஒன்றிய உணர்வால் உடன்போகக் கெழுந்தோர்

சென்றொரு சுரநகர் சேர்ந்தனர்; ஆங்கண்     

—————————————————————

          அவ்வயின் – அவ்விடம், துன்றிருள் – நிறைந்த இருள்.

++++++++++++++++++++++++++++++++++

வாழும் நாளில் மகப்பே றுறுங்கால்       

          ஆண்மக வுயிர்த்தவள் ஆவி துறந்தனள்;          95

          ஊண்புசி யானாய் உழலுமவ் வில்லவன்

புரிமனை காதற் பொன்னி நல்லவட்

பிரிவினை ஆற்றான் பெற்றஅம் மகவை

உறுமக வில்லா ஒருவன் பாற்படுத்        

          தேகினன் வெறுத்தே; இன்னுயிர் நீத்தஅப்        100      

     பொன்னியின் செல்வன்இம் மீனவன், பூங்கொடி!   

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்