பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 6 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி)

பாடு சிட்டே பாடு ! பண்பாடு !


 


காட்சி – 6
அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு
இடம்      :     குடில் முன் உள்ள மரக்கிளை
நிலைமை  :     (நாடகம் பற்றிய கருத்துரையில்
பேடும் சிட்டும் ஈடுபடல்)
ஆண் :     நாடகம் எப்படி உள்ளது சொல்?
பேடே! நீயும் பெண் தானே!
பெண் :     எனக்கென்னத் தெரியும்! நான் சொல்ல?
    உனக்கெதும் தெரிந்தால் சொல்லிவிடு!
ஆண் :     நடப்பிற்கும் நாடகக் காட்சிக்கும்
பிடிப்பே இல்லையாய்ப் பலரிங்கு
சுடுமொழி கொண்டே தமக்குள்ளே      கடுமையாய்
உரைக்கின்றார்! பார்த்தாயா?
பெண் :     கேட்டேன்! நானும்! இருந்தாலும்
போட்டேன்! உமக்கு புதிராக!
(வார்த்தையைப் பொரிக்கும் பேடங்கே
நேர்த்தியாய் உரையை முடித்ததனால்
சேர்த்து அணைக்க ஆண்சிட்டு
கோர்த்தே அணைத்தது பெண்சிட்டு)
பெண் :     சரி! சரி! போதும்! விளையாட்டு
உரைக்கின்றார் கவிஞர்! ஏதோ! தான்!
(உரிமையில் கொஞ்சியே அடங்கியது
உற்றுக் கேட்கவும் எண்ணியது)
(காட்சி முடிவு)

(பாடும்)

அகரமுதல 61

 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue