பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 5 – ஆ.வெ.முல்லை நிலவழகன்


ஆ.வெ.முல்லைநிலவழகன்
ஆ.வெ.முல்லைநிலவழகன்


(மார்கழி 13, 2045 / திசம்பர் 28,2014 தொடர்ச்சி)
காட்சி – 5
(நாடகக் காட்சி – 1)
அங்கம்   :     அருண் மொழி, பூங்குயில்
இடம்      :     அருண்மொழி இல்லம்
நிலைமை  :     (அருண் மொழி  வருகைக்காகத்
திருமகள் காத்தே இருக்க
வருகின்றான் அருண்மொழி ஆங்கே!
பெறுகிறாள்! பூங்குயில் இன்பம்!)
அருண்   :     கண்ணானக் கண்ணே!
                     ஏனிந்த வாட்டம்?
                           பெண்ணே! நான் நீங்கிச்
              சென்ற நாள் ஒன்றே!
                          மனம் வேறு தவறு
                                 செய்யாத போது
                         சினமென்னும் உறவைத்
                             துணை கொள்ளலாமோ?
பூங்            :     கண்ணான கண்ணா!
        ஏனிந்த வாழ்வு?
                           உண்மை! நீர்! சென்ற
                                நாள் ஒன்று அறிவேன்!
                            மனமென்னும் கோயில்
                              தெய்வம் நீ! போக
                            வணங்குவது யாரை!
                            சொல்லுவாய்க் கொஞ்சம்?
அருண்    :     எங்கிருந்தாலென்ன?
அறியாத பெண்ணா?
அங்கமே நீங்கும்!
                            மனமென்றும் நீங்கா!
 பூங்       :     என்சொல்லைக் கேட்கும்
                                  இதயமோ எனக்கில்லை
                        என்ன! நான் செய்வேன்?
வழியொன்று சொல்வாய்?
அருண்    :     நனிக்கனியில் சொல்லும்
                               சுவையுள்ள பொருளும்
                         ஒன்றாகச் சேர்த்து
                                       உரையாடும் போது

சொல்லவோர் வழியும்
                                  இல்லையே கண்ணே!
செல்வமே கோபம்
இன்னுமா! உனக்கு?
பூங்       :     வீசுந்தமிழ்க் காற்றாய்
வெயிற் கேற்ற நிழலாய்
பேசும் மொழி கண்ணா
பேசியது போதும்!
ஏங்கியது உள்ளம்
உன் மொழி கேட்க!
நீங்கியது வாட்டம்!
நெருங்கவே வெட்கம்!
அருண்    :     சிணுங்கியது போதும்!
புசிப்போமா கனியை!
கனியே நான் சென்ற
ஊர் பற்றிச் சொல்வேன்!
பூங்       :     உம் சொல்லே இன்ப
வெள்ளமாய் ஓட!
நமக்கென்ன! கனியும்
வேண்டுமா? அத்தான்!
அருண்:     ஐயய்யோக் கண்ணே!
இது என்ன பெண்ணே!
பைங்கொடி உண்ண
நான் காண வேண்டும்
பூங்       :     நீர் உண்ணும் முன்னே
நான் உண்ணலாமா?
விருந்தோம்பல் அறியா
தமிழ்ப் பெண்ணும் உண்டா?
அருண்    :     உணராதார் சொன்ன
தமிழ்நூல்கள் இல்லை
பெண்மைக்குச் சான்று
நீதாண்டிக் கண்ணே!
 (காட்சி முடிவு)

two-sparrows05
(பாடும்)
 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue