Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 42 : தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல்

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 41 : 8. கடல்நகரில் தங்கிய காதை-தொடர்ச்சி)

பூங்கொடி

தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல்

ஆண்டு நிகழ்ந்த அத்துணைச் செய்தியும்  
 மூண்டெழும் உணர்ச்சி முந்துற மொழிந்து'இனும்  25
 புகலுவென் கேட்டி! பூங்கொடி ஆற்றிய

தகவுரை கேட்டோர் அகமிக வுருகி
இன்னுஞ் சின்னாள் இருந்திடல் வேண்டும்
என்ன நயந்தனர்; எழிற்பூங் கொடியும்
ஆண்டுளார் பண்பொடு அவர்தம் அரசியல் 30
காண்டகு நெஞ்சினள் கனிவோ டிசைந்தனள்;
சின்னாள் இருந்து செந்தமிழ் பரப்பிப்
பின்னர் மீளுவள் பேதுறல் தவிர்நீ’
இன்னணம் தாமரைக் கண்ணி இசைத்தலும்

அருண்மொழி மனநிலை

 அல்லி வருந்தி அருண்மொழி தன்பாற் 35
 புல்லி, அனைத்தும் புகன்றது கேட்டவள்

கலங்கினள் ஆயினும் `கன்னித் தமிழின்
விலங்குபடை படஅவ் வீரங் காட்டினள்;
வாழ்கஎன் மகளே! வாழ்கஎன் மகளே!
வாழ்கஎன் தமிழே! வாழ்கஎன் தமிழே!’ 40
எனுமுரை கூறி இறுமாந் திருந்தனள்
மனமொழி செயலெலாம் மாசறத் திகழ்ந்தவள்;

பூங்கொடி கலக்கம்

 கல்ல்லென் பேரூர் கடல்நகர் ஆங்கண்
புல்லர் வீசிய கல்லின் விசையால்
++++++++++
 ஆயே - தாயே, நயந்தனர் - வேண்டினர், பேதுறல் - மயங்குதல், புல்லி - பொருந்தி, இறுமாந்து - செம்மாந்து, கல்ல்லென் - (ஒற்றளபெடை) `கல்' என்னும் ஒலியுடைய, விசை - வேகம். 

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue