Skip to main content

இறப்பின்றி வாழலாம் வா! – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தலைப்பு-இறப்பின்றிவாழலாம், தமிழ்நெஞ்சன் :thalaippu_irappindrivazha_thamizhnenjan

இறப்பின்றி வாழலாம் வா!

பட்டுப்போன பனை மரமும்
கிளிகளுக்கும்
ஆந்தை மரங்கொத்திக்கும்
வாழப் பொந்தாகிறது
ஏ….மாந்தனே!
உயிர்விட்டுப் போனபின்
மண்ணோடு மண்ணாகிறாய்
இல்லெனில்
நெருப்பில் சாம்பலாகிறாய்
நீ நினைத்தால்
கண்ணற்றவர்களுக்குக்
கண்ணாகலாம்
மீண்டும் இவ்வுலகை
நீ பார்க்கலாம்
இருக்கும் போது
குருதிக் கொடை
இறந்த பின்னர்
உறுப்புக் கொடை
வள்ளல் ஆகலாம் வா!

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue