பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 9 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 9 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

mullainilavazhakan
காட்சி – 9
அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு
இடம்     :       மரக்கிளை
நிலைமை :     (சிட்டே தனது எண்ணத்தைச்
சிறிதே விளக்கிடப் பெண் சிட்டோ
                     பட்டென இருளைக் கிழித்தாற்போல்
                             பகன்றிடச் சிட்டோ திகைக்கின்றது)
ஆண் :     அன்புப் பேடே!
அறுசுவை உணவை கணவனுக்குத்
திருமகள் வடிவாய் வந்திங்கு
நன்றே படைத்தைப் பார்த்தாயா?
என்றே ஒருவர் கேட்பதைப்பார்!
பெண்     :     உணவேயின்றி உருக்குலைந்து
நாளும் மக்கள் வாடிவிட
எப்படி இவ்வகை செய்வதென
தப்பாமல் மற்றவர் உரைப்பதைக் கேள்!
நாடகந்தானே! தெரியலையா?
போடா! புத்தியற்றவனே!
வேறு எப்படி இருந்துவிடும்!
கூறும் ஒருவரின் கூற்றும் கேள்!
ஆண் :     எதுவோ? என்னவோ? பேசட்டும்!
இதற்கா! இங்கு நாம் வந்தோம்?

(காட்சி முடிவு)
two-sparrows09
(பாடும்)



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue