Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 65 : மீனவனைப் பழித்தல்

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 64 : கலை பயில் தெளிவு-தொடர்ச்சி)

          என்றனன்; அவ்விடை இருந்தவர் ஒருவர்

`நன்று நன்றடா! மரபினை நவிலக்         

          கூசினை யல்லை! குலவுநின் மரபோ     125

          ஏசலுக் குரியது! வேசியின் பிள்ளை!

சாதி கெடுத்தவள் தந்தைசொல் விடுத்தவள்

வீதியில் நின்றவள் விடுமகன் நீயோ

எம்பெரு மரபை இகழ்ந்துரை கூறினை?         

          வம்பினை விலைக்கு வாங்கினை சிறியோய்!’         130

          என்றிவை கூறி ஏளனம் செய்தனர்;        

          `பெரியீர்! ஏளனப் பேச்சினை விடுமின்!

சிறியேன் தீங்கு செய்ததும் உண்டோ?

அன்னையைப் பழித்தீர் ஆணவப் போக்கால்,

          என்னைப் பிணித்தீர் இலையேல் நும்முடல்    135

          துண்டு துண்டாத் துணிப்பென், பிழைத்தீர்!   

          கண்ட தவறென் காரிகை கற்பில்?

ஒருவனை உளத்தால் உன்னினள், எதற்கும்

வெருவிலள், அவனே விழைமண வாளன்       

          என்றவன் துணையை ஏற்றனள் காதலில்        140

++++

          உருவு – உருவம், எள்ளேல் – இகழாதீர், கோட்பகை – கொள்பகை, பிணித்தீர் – கட்டினீர்.

++++

வென்றனள், பொன்னி, வீரத் தாயென

நின்றவள் கற்பின் நிறைதனை இகழ்ந்தீர்!     

          கணவனை இழந்த காரிகை நும்மகள்

குணமிழந் தாளிதைக் குவலயம் அறியும்       

          கருவுற் றாளெனக் கண்டதும் நெஞ்சம்  145

          வெருவுற் றிழைத்த வினையெலாம் மறந்தீர்!

கிணறே உரைக்கும்நும் கீழ்மைக் குணமெலாம்,

உணரா தும்மை உயர்வா நினைத்தீர்!

கொடும்பழி யஞ்சாக் குலத்தினில் தோன்றி  

          மிகும்பொருள் ஒன்றால் மேலவர் போல 150

          நாடகம் நடித்தீர்! நல்லவள் கற்பில்

கேடுரை கிளந்தீர்! கிளறேல் என்சினம்!

 (தொடரும்)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்