Posts

Showing posts from September, 2024

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்,21, பொதுவறு சிறப்பின் புகார்

Image
     ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         13 September 2024         அ கரமுதல ( என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 20. நொச்சியும் உழிஞையும்-தொடர்ச்சி ) என் தமிழ்ப்பணி பொதுவறு சிறப்பின் புகார் பூம்புகார் எனும் தொடர் அழகிய புகார் நகரம் எனப் பொருள்படும் . புகார் எனும் பெயர், பொதுவாகத் துறைமுக நகரங்களைக் குறிக்கும் என்றாலும், அது சிறப்பாகக் காவிரிப்பூம்பட்டினத்தை மட்டுமே குறிக்க வழங்கும். புகார் எனும் பெயர், அது கடற்கரையைச் சேர்ந்த ஒரு நகரம் என்பதை மட்டுமே உணர்த்தும்.  காவிரிப்பூம்பட்டிளம் எனும் அதன் பிறிதொரு பெயர்,  அஃது இருந்த இடம் இஃது என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கும். பட்டினம் எனும் பெயர், புகார் என்பதை போன்றே, கடற்கரை ஊர்களை’ உணர்த்தும் பொதுப்பெயராம்; நாகப்பட்டினம் காயல்பட்டினம், அதிராம் பட்டினம் என்ற பெயர்களை நோக்குக; அப்பெயரின் முன் இணையாக வந்துள்ள காவிரிப்பூம் என்ற தொடர், ஈண்டுக் குறிப்பிடும் பட்டினம், காவிரிக் கரையில் அமைந்துள்ள, அழகிய நகராகும் என்பதையும் உணர்த்தும்; ஆகவே,  காவிரி கடலோடு கலக்குமிடத்தில் அமைந்த அழகிய நகரே, காவிரிப்பூம்பட்டினம்  என்பதை, அத்தொடர் தெளிவாக உண

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 66 : சாதி ஏது?

Image
   ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         12 September 2024         அ கரமுதல (கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 65 : மீனவனைப் பழி த்தல்-தொடர்ச்சி) பூங்கொடி சாதி ஏது?           சாதி என்றொரு சொல்லினைச் சாற்றினீர் ஆதியில் நம்மிடம் அச்சொல் இருந்ததோ?                 பாதியில் புகுந்தது பாழ்படும் அதுதான்;          155            தொழிலாற் பெறுபெயர் இழிவாய் முடிந்தது ; அழியும் நாள்தான் அணிமையில் உள்ளது; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென் றோதிய திருக்குறள் உண்மைநும் செவிப்புக விலையோ?               கதிரும் நிலவும் காற்றும் மழையும்         160           எதிரும் உமக்கும் எமக்கும் ஒன்றே! தவிர்த்தெமை நும்பாற் சாருதல் உண்டோ? கபிலர் அகவல் கண்டதும் உண்டோ?     காலம் அறிந்து கருத்தை மாற்றுக           சாதிப் பெயர்சொலித் தாழ்வும் உயர்வும்                   ஓதித் திரியின் உலகம் வெறுக்கும்;         165 —————————————————————           குவலயம் – உலகம், கதிர் – கதிரவன். +++++++++++++++++++++++++++++++++ பிறப்பால் தாழ்வுரை பேசுவீ ராயின் சிறப்பால் நீவிர் செப்புநும் முன்னையர் மூலங் காணின் ஞாலஞ் சிரிக்கும்; காலங் கருத

அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 21-23

Image
    ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         10 September 2024         அ கரமுதல (அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 18-20- தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 21.  நரியும்   பூனையும் காட்டில் அலைந்து திரிகிறது நரி, ஒரு சமயம் நகரத்துக்கு வந்து, ஒரு பூனையைக் கண்டு அதனுடன் நட்புக் கொண்டது. நட்பு முற்றவே ஒருநாள் நரி பூனையைக் காட்டுக்கு அழைத்து, முயல்கறி படைத்து விருந்து வைத்தது. சுவையாக விருந்துண்ட மகிழ்ச்சியில் பூனை நரியைப் புகழ்ந்து ஆடிக் களிப்புற்றது. மற்றொருநாள் பூனை நரியை நகரத்திற்குள் விருந்துக்கு அழைத்தது. நகரத்திற்குள் வர நரி முதலில் தயங்கினாலும், பூனை கூறிய ஆட்டு இறைச்சியைச் சுவைக்கும் ஆசையால் ஒப்புக்கொண்டது. பூனையும் நரியைத் தன்னுடன் மெத்தைக்கு மெத்தை தாவச் செய்து அழைத்துச் சென்று ஒரு வீட்டு மாடியில் விருந்து படைத்தது. வயிறார உண்ட நரி, முன்பு பூனை செய்ததைப் போல்பாட ஆரம்பித்தது. அதைக்கண்டு பயந்த பூனை, “பாடாதே! பாடினால் நம் இருவருக்கும் ஆபத்து” என்று சொல்லியும் கேளாமல் நரி ஊளையிடவே, வீட்டுக்காரர் வந்து உலக்கையால் தாக்கி, நரியைக் கொன்று குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தார். பூனை

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 20. நொச்சியும் உழிஞையும்

Image
     ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         06 September 2024         அ கரமுதல ( என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 19, சொல்லின் எவனோ? – தொடர்ச்சி ) என் தமிழ்ப்பணி   17. நொச்சியும் உழிஞையும் மண்ணாசை கொண்டு, அண்டை நாட்டு அரசனோடு போரிடப் போன ஓர் அரசன், போரை விரும்பி மேற்கொண்டவனாதலின், அப்போரை மேற்கொள்வதன் முன்னர், தன்வலி, மாற்றான் வலி, தனக்கு ஆகும் காலம், மாற்றானுக்கு ஆகும் காலம், தனக்கு வாய்ப்புடைய இடம் மாற்றானுக்கு வாய்ப்புடைய இடம், ஆகியவற்றைப் பலமுறை ஆராய்ந்து, ஆராய்ந்து, தன் வலிமிக்க நிலையில், தனக்கு ஏற்புடைய காலத்தில், வாய்ப்புடைய இடமாக நோக்கிப் போர் தொடங்கியிருப்பன். ஆனால், அவன் பகைவனாகிய, மண்ணுக்குரிய மன்னவனோ எனில், அத்தகைய முன்னேற்பாடுகளோடு போர்க்களம் புகுந்தவனல்லன்; பகையரசன் படை தன் நாட்டுக்குள் புகுந்து, தன் நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது என்பதை அறிந்தவுடனே, அப்படையை விரட்டித் தன் நாட்டை வாழ்விக்க வேண்டும் என்ற எண்ணமே முன் நிற்க, விரைந்து களம் புகுந்தவனாதலின் அந்நிலையில், தன் படைபலம் யாது? பகைப் படையின் பலம் யாது? தனக்கு ஏற்புடைய காலந்தானா? தனக்கு வெற்றியளிக்