Skip to main content

அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: பதிப்புரையும் என்னுரையும்




கதைகளை இனிமையாகச் சொல்லவும் வேண்டும்; அந்தக் கதைகளைக் கற்கும் பிஞ்சு நெஞ்சங்களிலே நல்லறிவுச் சுடர்களையும் ஏற்றவேண்டும். நல்லறிவு பெற்ற மக்களே நல்லவர்களாக விளங்குவார்கள் நல்லவர்கள் வாழும் நாடே நல்ல நாடாகவும் விளங்கும்; அந்த நல்லறிவின் வளர்ச்சிக்குக் கதைகள் பெரிதும் உதவும்.

தமிழர்கள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் நெறியோடு வாழவேண்டும் என்று கருதுபவர் முனைவர் முத்தமிழ்க் காவலர், கி. ஆ. பெ. விசுவாதம் அவர்கள். இந்த நோக்கில் அவர்கள் அரிய பல கருத்துச் செல்வங்களை வழங்கி வருகின்றார்கள். இப்போது, ‘”அறிவுக் கதைகள் நூறு’’ என்னும் இந்த நூலையும், அருளோடும் அன்போடும் ஆக்கித் தந்துள்ளார்கள்.

இத்தகைய அருமையான கதைகளைச் சுவையாகவும் இனிமையாகவும் அமைத்து, அவற்றை நூல்வடிவில் வெளியிட்டு மகிழ எங்களுக்கு வாய்ப்பளித்த முத்தமிழ்க் காவலர் அவர்களுக்கு எங்கள் நன்றியும் வணக்கமும் உரியன.

—————–

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்