Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்-தொடர்ச்சி)

தொண்டுபூண் டார்க்குத் தூயநல் லுளனும்,

கண்டவர் பழிப்பாற் கலங்கா உரனும்,

துயரெது வரினும் துளங்கா நிலையும்,

அயரா உழைப்பும், ஆயும் அறிவும்,        

          தந்நல மறுப்பும், தகவும் வேண்டும்        105

          இந்நல மெல்லாம் ஏற்றொளிர் நீயே;      

          விளக்கிடை நின்றான் வீங்கிருள் புகுவோன்

துளக்கம் கொள்வான்; துணைவிழிப் புலனும்

ஒளியிழந் தொருபொருள் உணரா திருக்கும்; 

          கழியிருள் அதனுள் கடந்தனன் செல்லின்        110

          வழியதும் புலனாம் ஒளியுங் காணுவான்;

பொதுநலம் புரிவோர் நிலையதும் இதுவே;

முதன்முதற் புகுவோர்க்கு மலைப்பே முந்துறும்,

மலைப்பும் இளைப்பும் மதியா ராகி      

          உழைப்போர், வருதுயர் ஒன்றுங் காணார்;      115

          அரிதாய் மலைப்பாய்த் தோன்றிய அப்பணி

சிறிதாய் எளிதாய்ச் செயற்படும்; அதனால்

என்மொழி யாவும் ஏற்றுளம் பதித்துத்

தென்மொழி உயரத் தேன்மொழி, தொண்டுசெய்!  

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்