Skip to main content

காணாமல் போவர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

காணாமல் போவர்!  


நேற்றுவரை வந்தவர்கள்
நாளை காணாமல்
போவர்

விரல் மை
காயும் முன்னர்
மாயமாய் மறைவர்

மறந்து போய்
நன்றி சொல்ல
வரலாம் சிலர்

தவறாமல் பலர்
தொகுதிப் பக்கம்
காணாமல் போவர்

நம் நாட்டுத்
தேர்தலின்
சிறப்பு இதுதான்

இருந்தாலும் நாம்
தவறாமல்
வாக்களிப்போம்!

இலக்குவனார் திருவள்ளுவன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue