Ilakkuvanarin pataippu manikal 83 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 83. தமிழ் நாட்டில் இலக்கிய வறுமை

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

83. தமிழ் நாட்டில் இலக்கிய வறுமை

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 02/11/2011


இன்று தமிழ் நாட்டில் இலக்கிய வறுமை இனிதே ஆட்சி புரிகின்றது.  பிற நாட்டார் தலைவணங்கும் இலக்கியங்கள் சில நூற்றாண்டுகளாகத் தோன்றவே இல்லை.  பிற துறைகளில் உண்டாகும்.  வறுமையைப் பிற நாட்டினர் துணை கொண்டு போக்கிக்கொள்ள இயலும்.  ஆனால் இலக்கிய வறுமையைப் போக்கப் பிற நாட்டினர் துணை பயன்படாது.  இந்நாட்டில் உள்ளவர்களிடையே இனிய புலவர்கள் தோன்றுதல் வேண்டும்.  தோன்றும் புலவர்கள் தொல்காப்பியத்தைக் கற்று அதன் மரபினை அறிந்துகொள்ளுதல் வேண்டும்.  அறிந்து அகமும் புறமும் வண்ணமும் வனப்பும், நூலும் உரையும், ஆற்றுப்படையும் பாடாண் பாட்டும் மீண்டும் மலரச் செய்தலில் ஊக்கம் காட்டுதல் வேண்டும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 283)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue