நன்னெறி



துறைமங்கலம் சிவப்பிரகாசர் அருளியது பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார்மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்காழ் ஒன்று உயர்திண் கதவு வலியுடைத்தோதாழ் ஒன்று இலதாயின் தான். (பாடல்-32)அழகிய நெற்றியையுடைய பெண்ணே! வைரம் பாய்ந்த மிகவும் வலிமை மிகுந்த கதவானாலும், ஒரு தாழ்ப்பாள் இல்லாவிட்டால் அதற்கு வலிமை கிடையாது. அதுபோல, பெருமை வாய்ந்த நூல்களின் பயன்களை உணரக்கூடிய அறிவு இல்லாதவர் செய்யும் அறங்கள் பயனற்றவையாகும்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue