Skip to main content

தக்காரைப் போற்று! – மு.பொன்னவைக்கோ

அகரமுதல

தக்காரைப் போற்று!
தக்காரை நெஞ்சாரப்
            போற்ற வேண்டும் – ஆற்றல்
மிக்காரை அரியணையில்
            ஏற்ற வேண்டும்.
தமிழ் காக்கும் நல்லோரைக்
            காக்க வேண்டும் – அதுவே
தமிழ் வளர நாமாற்றும்
            சேவை யாகும்.
தமிழென்றும் தாழ்வின்றி
            தழைக்க வேண்டும் – அந்தத்
தமிழ்ச் சேவை செய்துஉயிர்
            வாழ வேண்டும்.
எக்காலும் இந்நோக்கில்
            மாற்றம் இன்றி – வாழ்வில்
ஏற்றமுடன் பணியாற்றும்
            ஆற்றல் வேண்டும்
என்றெம்மை ஈன்றவளை
            என்றும் போற்றி – தக்காரின்
ஈடில்லா அன்பிற்கு
            அடிமை யாவோம்!
முனைவர் பொறி. மு. பொன்னவைக்கோ

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்