Skip to main content

தக்காரைப் போற்று! – மு.பொன்னவைக்கோ

அகரமுதல

தக்காரைப் போற்று!
தக்காரை நெஞ்சாரப்
            போற்ற வேண்டும் – ஆற்றல்
மிக்காரை அரியணையில்
            ஏற்ற வேண்டும்.
தமிழ் காக்கும் நல்லோரைக்
            காக்க வேண்டும் – அதுவே
தமிழ் வளர நாமாற்றும்
            சேவை யாகும்.
தமிழென்றும் தாழ்வின்றி
            தழைக்க வேண்டும் – அந்தத்
தமிழ்ச் சேவை செய்துஉயிர்
            வாழ வேண்டும்.
எக்காலும் இந்நோக்கில்
            மாற்றம் இன்றி – வாழ்வில்
ஏற்றமுடன் பணியாற்றும்
            ஆற்றல் வேண்டும்
என்றெம்மை ஈன்றவளை
            என்றும் போற்றி – தக்காரின்
ஈடில்லா அன்பிற்கு
            அடிமை யாவோம்!
முனைவர் பொறி. மு. பொன்னவைக்கோ

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue