Posts

Showing posts from June, 2024

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 10. மெய்ம் மலிந்து நகைத்தேன்

  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         28 June 2024         அ கரமுதல ( என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 09 இறையனார் அகப்பொருள் உரை -தொடர்ச்சி ) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 7. மெய்ம் மலிந்து நகைத்தேன் காடு சூழ்ந்த மலைநாட்டு மகன் ஒருவன், குறவர் குடிக் குமரி யொருத்தியைக் கண்டு காதல் கொண்டான். தங்கள் குலக் கடவுளாகிய முருகன் உறைவதால் பெருமைப் பெற்ற மலை உச்சியில் தோன்றிய அவன் நாட்டு அருவிகள், கீழே பாய்ந்து அவன் நாட்டுக் காட்டை வளமுறச் செய்வது போலேவே, ஆற்றல் அருள், முதலிய அரிய பண்புகளால் சிறந்த பெரியோனாய அவன், தன்பால் பேரன்பு கொண்டு, தன்னை வாழ்விக்க வந்ததைக் கண்டு, அப்பெண்ணும் அவன் பால் காதல் கொண்டாள். இருவரும் தம் பெற்றோர் அறியாவாறு தம் காதலை வளர்த்து வந்தனர். அவர் காதலும் ஒருவரை இழந்து ஒருவர் உயிர் வாழ்தல் இயலாது ஒருவரை யொருவர் ஒரு நாள் காணாது போயினும் அவர் உயிர் நீள் துயர் கொள்ளும் எனக் கூறுமளவு பெருகி வி்ட்டது. இந்நிலையில், அப்பெண்ணைப் பெற்ற தாய், மகள் மணப்பெறு பருவத்தை அடைந்து விட்டாள்; இனி அவளைப் மணைப்புறம் போக விடுதல் கூடாது எனக் கொண்டு, அவளை  இற்செறித்து விட்டாள்.  அதனால்

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 55 : பூங்கொடியின் பூரிப்பு

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         27 June 2024         அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 54 : எரிந்த ஏடுகள் – தொடர்ச்சி ) பூங்கொடி பூங்கொடியின் பூரிப்பு  அணங்கிற் கின்பம் அகத்தினிற் பொங்க அன்னாய் என்னுயிர் அன்னாய்! தமிழே! ஒன்னார் மனமும் உருக்குந் கமிழே! அகப்பகை புறப்பகை கடந்தாய் தமிழே ! தகப்பன் தாயெனத்  தகுவழி  காட்டி மிகப்பல் லறநூல் மொழிந்தாய் தமிழே!           உலகம் வியக்க ஒப்பிலாக் குறளால்       135           கலகம் தவிர்ப்பாய் கன்னித் தமிழே! இறக்கும் வரைநின் பணியே யல்லால் துறக்கமொன் றுண்டெனத் துணியேன் தமிழே! இடுக்கண் வருங்கால் துடைப்பாய் தமிழே!              மொழிவளம் மிகுந்தாய் முதன்மைத் தமிழே!  140           பழியிலா நின்னைத் தொழுதக வல்லது வாழ்த்துதற் கென்வாய் வகையறி யாதே’        பூங்கொடி தாயகம் மீளல்           இவ்வணம் பலபட இசைத்து, முதுமை கவ்விய அன்னையைக் கைகுவித் தேத்திப்               பவ்வங் கடந்து பாவை பூங்கொடி 145 .           பிரிவாற் கலங்கிப் பேதுறும் நெஞ்சத் தருண்மொழி வதியும் ஆயிடைத் தோன்றித் துயரங் களைந்து தூயநற் றமிழால் இயலுங் கூத்துநூல் இசைநூல் காட்டி,    

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 09. இறையனார் அகப்பொருள் உரை

Image
  ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         21 June 2024         அ கரமுதல (என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 08. பெருமை என்பது கெடுமோ? – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 6. இறையனார் அகப்பொருள் உரை இறையனார் அகப்பொருள் முதல் சூத்திர உரையில் உரை கண்ட வரலாறு பற்றிய விளக்கம் அளிக்கும் பகுதியில் “ நக்கீரனால் உரைகண்டு, குமாரசுவாமியால் கேட்கப்பட்டது” எனவரும் தொடர்கொண்டு, இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவர் எனக் கொள்வர் சிலர். நக்கீரனார் கடைச் சங்கப்புலவர்: கடைச்சங்க இலக்கியங்களில் கட்டளைக் கலித்துறை இடம்பெறவில்லை: கட்டளைக் கலித்துறைக்குத் தொல்காப்பியரும் இலக்கணம் வகுக்கலில்லை; மேலும் கோவை எழுந்த காலம் கடைச் சங்க காலத்திற்கும் பின்னர் நானூறு ஆண்டுகள் கழிந்த பிற்காலம்: அங்ஙணமாக,  கடைச்சங்க காலத்தவராகிய நக்கீரர், தமக்கு நானூறு, ஐந்நூறு ஆண்டுகள் பிற்பட்டுத் தோன்றிய, கோவையாரிலிருந்து கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களை மேற்கோள் காட்டியிருக்க இயலாது;  ஆனால் இறையனார் அகப்பொருள் உரையில் கோவையாரின் கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் காட்டப்பெற்றுள்ளன. எழுத்து, சொ

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 54 : எரிந்த ஏடுகள்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         20 June 2024         அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 53 : மூதாட்டி தன் வரலாறுரைத்தல் – தொடர்ச்சி) பூங்கொடி எரிந்த ஏடுகள் அண்டையில் நின்ற அந்நூல் நிலையப் பணியாள் தன்பாற் பரிந்து வினவினென், இன்னும் உளவோ ஏடுகள் என்னவும் அன்னாய்! ஏடுபல் லாயிரம் இருந்தன, வெந்நீர் வேண்டி விறகென அவற்றை எரித்தோம் என்றனன்; துடித்ததென் மனனே, 90 எரித்தஅவ் வேடுகள் எத்தகு நூலோ! i கலைமகள் தமிழைக் காப்பதிப் படியோ! கொலைமிகு நெஞ்சர் கொடுமைதான் என்னே! வெந்நீர் பாய்ச்சி, மிகுபயன் நல்கும் கன்னல் தமிழ்ப்பயிர் கருகிட முனைந்தனர்; 95 என்னே! என்னே இவர்தம் மதிதான்! மடமை என்கோ? கொடுமை என்கோ? படம்விரி யரவுக்குப் பசுப்பால் வார்த்தோம்! உடனுறை வாழ்வும் உவந்ததற் களித்தோம்! மனத்துயரம் அச்சகம் தொழிலோன் அவன்மனை யாட்டி 100 மகப்பெறு நிலையில் மிகப்பெருந் துயரால் வருந்துதல் கேட்டு விரைந்தவன் தொழிலைத் திருந்த முடித்து வரும்பொருள் பெற்று வீடு செல்ல விழைந்தவன் எடுக்கக் கூடும் எழுத்துக் குலைந்து சிதறி 105 விழ்ந்திடக் கண்டு வெதும்புதல் போல என்மனம் கலங்கி ஏடுகள் பார்த்தேன்; இருபெருஞ் சுவடிகள்

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 20 : முடிவுரை

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         15 June 2024         அ கரமுதல (இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 19 : செங்கோன் தரைச் செலவு-தொடர்ச்சி) தமிழர் வீரம் முடிவுரை விழுமிய வீரம் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்றார்  திருவள்ளுவர் . அவ்வுரையின் வழிநின்று வீரப்புகழ் பெற்றது பழந் தமிழ்நாடு.  பாரில் உயர்ந்த பனிவரை மேல் நின்றது பழந்தமிழர் வீரம். கங்கை நாட்டில் கதித்தெழுந்த பகைவரை அறுத்தது தமிழர் வீரம். கடல் கடந்து மாற்றாரைக் கலக்கியது தமிழர் வீரம்.  இது சென்ற காலத்தின் சிறப்பு. மறவர் நிலை அன்று நாற்றிசையும் போற்ற ஏற்றமுற்று வாழ்ந்த தமிழ்நாடு இன்று ஊக்கம் இழந்து உறங்குகின்றது . மன்னரும் மதிக்க வாழ்ந்த மறக்குலம் இடைக்காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டது. அக்குல வீரரது  முறுக்கு மீசை உருக் குலைந்தது. பணைத்த தோள் பதங்குலைந்தது; மாற்றார் தலை பறித்த மறவரது நெடுங்கரம் இன்று கழனியிலே களை பறிக்கின்றது. அணுகுண்டு ஆயினும் தமிழர் வீரம் அறவே அழிந்துவிட வில்லை.  வீறுபெற்றுத் தமிழர் தலையெடுக்கும் காலம் விரைந்து வருகின்றது.  அக்காலத்தில் தமிழ் நாடு புத்துயிர் பெறும். வருங்காலம் அணுகுண்டுக் காலம் என்ப

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 08. பெருமை என்பது கெடுமோ?

Image
ஃஃஃ         இலக்குவனார் திருவள்ளுவன்         14 June 2024        அகரமுதல (என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 07. திருக்கோவையார் உரைநயம் -தொடர்ச்சி ) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 5. பெருமை என்பது கெடுமோ? கன்னித் தமிழ் நாட்டில் கடல் வளம் கொழிக்கும் கவின் மிக்கது அந்நாடு. இயற்கை அன்னை அளித்த அரிய செல்வமாய் உப்பு, சிறு சிறு குன்றுகள் போல் ஆங்குக் குளித்து கிடக்கும் உப்பை உள்நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்கும் உமணர் எனும் உப்பு வணிகர் வண்டிகளை வரிசை வரிசையாக ஓட்டி வந்து நிறுத்தி உப்புப் பொதியேற்றும் காட்சியும், அவ்வண்டிகளில் பூட்டப்பெற்ற வலிய காளைகள் மலை நாடுகளிலும் மணல் வெளிகளிலும், கழிகளிலும், கழனிகளிலும் உப்புப் பொதியேற்றிய வண்டியுருள்கள் ஆழப் பதிந்த விடத்தும் மனம் தளராது மண்டியிட்டு ஈர்த்துச் செல்லும் இனிய காட்சியும் காண்பார் கண்களில் களிநடம் புரியப் பண்ணும். இத்தகைய உப்பு வணிகத்தால், அந்நாடு ஒருபால் உயர்வடைய, அந்நாட்டு உழவர்கள் தம் உழைப்பாலும், உயர்ந்த பண்பாலும் அந்நாட்டுப் பெருமையை மேலும் உயரப் பண்ணினர். நாட்டில் மக்கள் உழைக்க வேண்டாதே உண்டாம் உப்புச் செல்வம் மண்டிக் கிடக்கிறது: ஆ