நண்பர்கள் எம்மை நாடி வரலாம். நண்பர்களைத் தேடி நாம் போகலாம். “ஆயிரம் நண்பர்களை இணைத்தாலும் கூட ஓர் எதிரியைக் கூட ஏற்படுத்தி விடாதே!” எனப் பாவரசர் கண்ணதாசன் சொல்லிவைத்தார்! நண்பர்களை அணைக்கத் தான் நானும் விரும்புகின்றேன். நண்பர்கள் எதிரியாவதைக் கண்டதும் நானும் ஒதுங்குகின்றேன். எதிர்ப்பட்ட எதிரியும் நண்பராகலாம் எச்சரிக்கையாகப் பழகுகின்றேன். நண்பர்களே வேண்டாமென நானும் ஒதுங்கவில்லை – இத்தால்* நண்பர்கள் தேவையெனக் காத்திருக்கிறேன். நண்பர்களால் வானுயரப் புகழீட்டிய நண்பர்களால் தான் உணர்ந்தேன் நண்பர்கள் எனக்குத் தேவை என்றே! நண்பர்கள் இல்லையென்றால் – தனக்கு உளநோய் தான் வந்திருக்குமென நண்பர்கள் சொல்லித் தான் அறிந்தேன் நண்பர்கள் கூட நல்மருந்தென்றே! என்னை நண்பர் ஆக்குங்கள்… என்னை எதிரி ஆக்காதீர்கள்… நான் எதிரியாவதை விட நல்ல நண்பராகவே இருந்துவிடுகிறேன்! நல்ல நண்பர்களால் நானும் நீடூழி வாழலாமென்ற தன்நலம் கருதியே அழைத்தேன் நாளையாவது நல்ல நண்பர்களாக நாமிருக்கலாமென்றே!
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment