என்னும் குறட்பாவிற்கு திருக்குறள் மக்கள் உரையில் (ஏறத்தாழ பதினாறு) பதிப்புகளில் பாவேந்தரை அடியொற்றி, “மனைவி பயன்மழை போன்றவள்” என்று உரை எழுதியவர், அண்மையில் வரும் பதிப்புகளில், “பத்தினி சொன்னால் மழை பெய்யும்” என்று அறிவியலுக்குப் புறம்பான உரை எழுதித் திருவள்ளுவரைத் திடுக்கிட வைப்பார். தீர்வுக்குத் தெய்வப் புலவரை நாடுகிறோம். குறளாசான் எழுத்தாணியால் காமத்துப் பாலில் 1192 -ஆம் குறட்பாவைக் காட்டுகிறார்:
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி (குறள்.1192)
தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஆண்-பெண் சமன்மையை நிறுவச் சில இணைக் குறட்பாக்களை எழுதுவது வழக்கம். ‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க’ (குறள். 691) என்று நெருப்பின் தன்மையைக் கூறியவர், ஒரு காதலனாகக் காதலியிடம் ஒரு புதுமைத் தீயைக் காண்கிறார்:
நீங்கின்தெறூஉம்குறுகுங்கால்தண்ணென்னும்
தீயாண்டுப்பெற்றாள்இவள்
(குறள்.1104)
மனைவி சளைத்தவளா, என்ன? அவளும் அவள் நுகர்ந்ததைப் பதிவு செய்கிறாள்:
தொடின்சுடின்அல்லதுகாமநோய்போல
விடின்சுடல்ஆற்றுமோதீ
(குறள்.1159)
இது போல் இன்பம் திருமாலுலகில் கிடைக்குமா என்று வியக்கிறான் அவன்:
தாம்வீழ்வார்மென்தோள்துயிலின்இனிதுகொல்
தாமரைக்கண்ணான்உலகு
(குறள்.1103)
அவளுடைய நுகர்வும் அது போல்தான் இருக்கிறது:
புலத்தலின் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து (குறள்.1323)
இந்த இணைக்குறள்கள்போல்தான் குறட்பாக்கள் 55-உம் 1192-உம். குறள் 55-இல் மனைவி பயன்மழை. குறள்1192-இல் கணவன் பயன்மழை. திருவள்ளுவர் அறிவியல் அறிஞர் தான்!
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர் (குறள்.550)
இக்குறளுக்கு நாமக்கல் கவிஞர் உரை மனங்கொள்ளத் தக்கது:
‘கொலை செய்யும் பாதகர்களை அரசன் அப்புறப்படுத்தி விடுவது, பயிர்களைப் பாதுகாக்க களையெடுப்பது போலாகும்.’
மனுவும் களை எடுத்தலைப் பற்றிக் கூறுவதாலும் கொலைத்தண்டனையை ஆதரிப்பதாலும் பல உரையாசிரியர்கள் திருவள்ளுவர் மரணத் தண்டனையை ஆதரிப்பதாக உரை எழுதுகின்றனர்.
ஏற்கெனவே திருவள்ளுவர், ஒறுத்தல் என்ற சொல்லைத் தண்டித்தல் என்ற பொருளில் இங்கு எழுதியது போன்று 314-ஆம் குறளில் மூன்றாம் சீரில் கையாண்டுள்ளார். 550-ஆம் குறளையும் ஆற்றுநீர்ப் பொருள் கோள் முறையில் கொள்ளவேண்டும் என்பது குறளாசான் கருத்து.
இன்னாசெய்தாரைஒறுத்தல்அவர்நாண
நன்னயஞ்செய்துவிடல் (குறள்.314)
கொலைசெய்யும் பாதகர்களைத் தண்டிப்பது மீண்டும் கொலை செய்யாதிருக்க என்று பொருள்பட,
தக்காங்குநாடித்தலைச்செல்லாவண்ணத்தால்
ஒத்தாங்குஒறுப்பதுவேந்து
(குறள்.561)
என்று கூறுவதன் மூலம் திருவள்ளுவர் மரணத் தண்டனையை எதிர்க்கிறார் என அறியலாம்.
வகுத்தான்வகுத்தவகையல்லால்கோடி
தொகுத்தார்க்கும்துய்த்தலரிது
(குறள்.377)
பெரும்பாலும் உரையாசிரியர்கள் ‘வகுத்தான்’ என்ற சொல்லுக்கு, தெய்வம், ஊழ்த் தெய்வம் என்றெல்லாம் உரை எழுதுகின்றனர். பேராசிரியர் முனைவர் மோகனராசு நழுவல் உத்தியைக் கையாள்கிறார்:
“வரையறுக்கப் பட்ட வழிகளில் செல்லாமல், கோடிகோடியாகப் பொருள் சேர்த்தவரும் அதனைத் துய்க்க முடியாது.” மூலப் படைப்பாளியை (காரண கருத்தாவை) இருட்டடிப்பு செய்யும் இந்த உத்தியை ஆங்கிலத்தில் ‘agent deletion’என்று கூறுவார்கள். தீர்வு காணத் தெய்வப் புலவரை நாடுகிறோம்
:இயற்றலும்ஈட்டலும்காத்தலும்காத்த
வகுத்தலும்வல்லதரசு (குறள்.385)
திருவள்ளுவரின் இந்தத் தீர்வு அடுத்து வரும் குறளுக்கும் தீர்வாக அமையும்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். (குறள்.1062)
இந்தக் குறளுக்குப் பேராசிரியர் மோகனராசு தரும் உரையில் நழுவல் உத்தி இல்லை:
‘ஒரு சிலர் பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழ்தல் வேண்டும் என்றிருந்தால், வாழ்க்கை நெறிமுறைகளை உண்டாக்கித் தருபவன் கெட்டலைவானாக.’
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment