Thamizh kadamaigal 8 : தமிழ்க்கடமைகள் 8 தமிழா நீ எழுச்சி கொள்வாய்- புலவர் புஞ்சையரசன்

தமிழ்க்கடமைகள் 8

தமிழா நீ எழுச்சி கொள்வாய்
தமிழரிங்கு தமிழ்நாட்டில் ஒன்றி உள்ளம்
        தான்குரலே கொடுத்திட்டால் என்றோ அங்கு
தமிழர்க்குத் தமிழ்ஈழம் மலர்ந்திருக்கும்
        தமிழன்தான் இனமொழி நல்உணர்வே இன்றி
தமிழன்தான் வாழுகின்றான் இலங்கை தன்னின்
        தமிழர் வரலாற்றறியாப் பேதையாக
தமிழா நீ எழுச்சி கொள்வாய் எனிலோ நன்றே
        தரணிவாழ் தமிழரெலாம் மகிழ்ச்சி கொள்வார்.
- புலவர் புஞ்சையரசன்: தமிழ் எழுச்சிப் பாடல்கள் : பக்கம்  6

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்