thamizh kadamaigal 5 : தமிழ்க்கடமைகள் 5:தமிழ் கடன் கொண்டு வளராது - மொழிஞாயிறு தேவநேயப் பாவணர்

தமிழ்க்கடமைகள் 5: எழுத்தையும் சொல்லையும் கடன் வாங்காதே! - மொழிஞாயிறு தேவநேயப் பாவணர்




தமிழ் கடன் கொண்டு வளராது

கடன் வாங்குவதால் தமிழே வளருமென்றே- பலர்
    வலிந்துரைப்பார் மொழிவகை யறியார்
கடன் வாங்கியதே யில்லை தமிழ் அதிலே-பல
    வடசொல்லைப் பகைவர் புகுத்தியதால்- தமிழ்
வளமிகக் குன்றி வருகிறதே
ஒருவறியவன் வணிகம் செய்வதென்றால்-கடன்
    வாங்கியே செய்தல் வகையாகும்
கடன்வளவனும் வீணாய் வாங்கிவரின்- அவன்
    வண்பொருள் குன்றி வருவதுடன் -கடன்
வாங்கியென் றிழிவும் வந்துவிடும்
- மொழிஞாயிறு தேவநேயப் பாவணர்: இசைத்தமிழ்க்கலம்பகம்: ப.98

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்